வணக்கம்

எனது வலைப்பதிவிற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறேன். எனது வலைப்பதிவு பற்றிய தங்களின் கருத்துக்களை vsathishkumarmca(at)gmail(dot)com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
நன்றி

திங்கள், 31 அக்டோபர், 2011

ஏழாம் அறிவு

சமீபத்தில் வெளியான ஏழாம் அறிவு திரைப்படத்தைப் பார்த்தேன். கதையின் மையக்கரு ஒவ்வொரு இந்தியனையும், தமிழனையும் சிந்திக்க வைக்கும் விதமாக அமைந்திருந்தது. படத்தின் இயக்குனருக்கும், அதில் பணியாற்றிய அனைத்து கலைஞர்களுக்கும் என் பாராட்டுக்கள். மேலும் படத்தின் மற்ற நிறை, குறைகளைப் பற்றி அலசாமல் நம்முடைய அறியாமையைப் பற்றி சிந்தித்தோமானால் நாம் எவ்வளவு பின்னோக்கி வளர்ந்துள்ளோம் என்பது புரியும்.


நாம் பாதுகாக்க வேண்டிய பல நல்ல நூல்களையும், பழக்கங்களையும், பழந்தமிழர்தம் மரபுகளையும் பாதுகாக்க தவறிவிட்டோம் என்ற வருத்தத்தோடு மீதமுள்ளவற்றையாவது பாதுகாக்க முயல்வோம்.
 

புதன், 19 அக்டோபர், 2011

Google Buzz-ஐ மூட கூகுள் நிறுவனம் முடிவு

பேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைப்பின்னல் தளங்களுக்கு போட்டியாக கூகுள் தளம் கடந்த வருடம் அறிமுகப்படுத்திய சமூக வலைப்பின்னல் கருவி தான் கூகிள் பஸ்(Google Buzz).
கூகுள் பஸ் தொடக்கத்திலேயே அடிவாங்க காரணம் அதன் தனியுரிமை அமைவுகள்(Privacy Settings). கூகுள் பஸ் தனி தளத்தில் செயல்படவில்லை. ஜிமெயிலில்(Gmail) ஒரு பகுதியாக தான் செயல்பட்டது.
ஜிமெயிலில் சமீபத்தில் நீங்கள் மின்னஞ்சல் அனுப்பியவர்களின் பட்டியலையும், அரட்டை அடித்தவர்களின் பட்டியலையும் உங்களை பின்தொடர்பவருக்கு காட்டிக் கொடுத்தது.
மேலும் பஸ்ஸை செயல்நீக்கம்(Disable) செய்யும் வசதியும் இல்லை. இதனால் உலகெங்கும் கடும் எதிர்ப்பை சந்தித்தது கூகுள். பிறகு அதனுடைய தனியுரிமை அமைவுகளை மாற்றி அமைத்தது.
மேலும் அதனை செயல்நீக்கம் செய்யும் வசதியையும் தந்தது. கூகுள் பஸ்ஸில் செய்த தவறிலிருந்து மீண்டு தற்போது கூகுள் ப்ளஸ் தளத்தை வெற்றிக்கரமாக அறிமுகப்படுத்தியுள்ளது.
கூகுள் ப்ளஸ் தளத்திலேயே கூகுள் பஸ் வசதியையும் இணைத்தது. தற்போது கூகுள் ப்ளஸ்ஸில் முழு கவனம் செய்வதால் கூகுள் பஸ் வசதியை மூடுவதற்கு முடிவெடுத்துள்ளது
இன்னும் சில வாரங்களில் இது நிரந்தரமாக மூடப்பட்டுவிடும். நாளுக்கு நாள் புதிய வசதிகளை அறிமுகப்பத்திவரும் அதேவேளையில் தனது பல்வேறு வசதிகளை மூடிவருகிறது கூகுள் தளம். மூடப்போகும் வசதிகளில் சில:
1. Code Search: இணையத்தில் உள்ள திறந்த மூல குறியீடுகளை(Open Source Codes) தேடுவதற்கு பயன்பட்ட Code Search என்னும் தேடுபொறி வசதி. இது 2012 ஜனவரி 15ஆம் திகதி மூடப்படுகிறது.
2. Jaiku: இது ட்விட்டர் போன்ற Micro Blogging தளம். இதனை 2007ஆம் வருடம் கையகப்படுத்தியது கூகுள். இதுவும் 2012 ஜனவரி 15ஆம் திகதி மூடப்படுகிறது.
3. Google Labs: கூகுளின் புதிய திட்டங்களை(Projects) சோதனை செய்வதற்காக பயன்படுத்தப்பட்ட கூகுள் லேப் தளம் இன்று மூடப்பட்டுவிட்டது.
4. Aardvark: இது சமூக தேடுபோறியாகும்(Social Search Engine). இங்கு நம்முடைய கேள்விகளை கேட்கலாம். பதில் தெரிந்தவர்கள் பதில் அளிப்பார்கள். Yahoo Answers தளம் போன்று. இந்த தளத்தை 2010ஆம் ஆண்டு கையகப்படுத்திய கூகுள் தளம் விரைவில் இதனை மூடப்போகிறது.
5. Google Pack: பல்வேறு பயனுள்ள மென்பொருட்களை பதிவிறக்கம் செய்ய பயன்பட்டு வந்த கூகுள் பேக் தளம் இவ்வசதியை நிறுத்திவிட்டது. ஆனால் முக்கிய மென்பொருட்களை பதிவிறக்கம் செய்வதற்கான சுட்டியை தந்துள்ளது. இன்னும் நிறைய வசதிகளை மூட முடிவெடுத்துள்ளது.

புதன், 20 ஜூலை, 2011

தமிழ் இணையக் கல்விக்கழகம்

உலகு தழுவி வாழும் தமிழ் மக்களின் பண்பாட்டுத் தேவைகளை மனதிற்கொண்டு தமிழக அரசால் நிறுவப்பட்ட தன்னாட்சி நிறுவனம். பலதரப்பட்ட மின் நூல்களைப் படிப்பதற்கு http://tamilvu.org/ செல்லவும்.

லிப்கோ தமிழ்ப் பேரகராதி

லிப்கோ தமிழ்ப் பேரகராதி - பற்பல ஆண்டுகளின் அனுபவத்தால் தொகுக்கப்பெற்ற நடைமுறை சொற்களஞ்சியம்!
 
http://www.lifcobooks.com/tamildictionary/

வியாழன், 30 ஜூன், 2011

சைக்கிள் ஓட்டினால் துணிகளை துவைத்து விடலாம்: இங்கிலாந்து மாணவர் சாதனை

இங்கிலாந்தின் சவுத்யார்க்ஷயர் நகரில் உள்ள ஷெபீல்டு ஹல்லம் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு முடித்திருப்பவர் ரிச்சர்டு ஹெவிட்(21). இவர் சூப்பர் வாஷிங் மெஷினை வடிவமைத்திருக்கிறார். பொதுவாக தண்ணீர், பவுடர், துணிகளை போட்டதும் என்ன செய்வார்கள். சுவிட்சை ஓன் செய்து சுழல விடுவார்கள். இந்த மெஷினுக்கு மின்சாரம், பற்றரி தேவையில்லை. வித்தியாசமான முறையில் சைக்கிளுடன் இணைக்கப்பட்டிருக்கிறது வாஷிங் மெஷின். சைக்கிள் ஓட ஓட அதனுடன் இணைக்கப்பட்டிருக்கும் வாஷிங் மெஷினின் உள்பகுதி சுழல்கிறது. துவைக்க வேண்டியதை போட்டதும் சைக்கிளை எடுத்துக் கொண்டு புறப்படுகிறார் ரிச்சர்டு. 10 நிமிடம் ரவுண்டு போய்விட்டு வீடு திரும்புகிறார். அவ்வளவு தான் முதல் ரவுண்டு தோய்க்கும் வேலை முடிந்தது. அழுக்கு தண்ணீரை கொட்டிவிட்டு நல்ல தண்ணீர் நிரப்புகிறார். சைக்கிளில் இன்னொரு ரவுண்டு. துணிகளை எடுத்து "டிரையர்" பகுதியில் போட்டுக் கொண்டு சைக்கிளில் மீண்டும் ஒரு சுற்று போய்விட்டு வந்தால் காய்ந்து விடுகிறது. இந்த ஐடியா உருவான பிளாஷ்பேக்கை பகிர்ந்து கொள்கிறார் ரிச்சர்டு. இதுகுறித்து அவர் கூறியதாவது: ஆப்ரிக்க நாடான புருண்டிக்கு போன போது ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்துக்கு சென்றேன். சேவை செய்ய விரும்பி குழந்தைகளின் துணிகளை தோய்த்து போட்டேன். மொத்தம் 30 லோடு. கை அசந்துவிட்டது.
வாஷிங் வேலையை எளிதாக்க வேண்டும் என்று முடிவு செய்தேன். சைக்கிள் சக்கரத்தின் சுழற்சியிலேயே இயங்கும் வாஷிங் மெஷினை உருவாக்கியுள்ளேன். ஷெபீல்டு பல்கலைக்கழகத்தில் நடக்கவுள்ள "க்ரியேட்டிவ் ஸ்பார்க்" கண்காட்சியில் இதுவும் இடம்பெறுகிறது.

தமிழிலும் இனி மொழிமாற்றம் செய்யலாம் : கூகிள்

கூகிள் Translate பற்றி அனைவரும் அறிந்திருப்பீர்கள். ஒரு மொழியிலிருந்து இன்னொரு மொழிக்கு கட்டுரைகளை மாற்ற உதவுகிறது.
இதுவரை தமிழ் மொழிக்கு மாற்றும் வசதி இல்லை. தற்போது அதனையும் அறிமுகப்படுத்தியுள்ளது. ஆனால் தற்போது சோதனை முறையாகவே அறிமுகம் செய்துள்ளது. அதனால் சரியாக மொழிமாற்றம் செய்யவில்லை. பல ஆங்கில வார்த்தைகளை ஆங்கில வார்த்தைகளாகவே கொடுக்கிறது.
மொழிமாற்றம் செய்ய:
http://translate.google.com/  தளத்திற்கு சென்று நீங்கள் டைப் செய்யுங்கள். நீங்கள் எந்த மொழியில் டைப் செய்தாலும் முடிந்த வரை அது தானியங்கியாக கண்டுபிடித்து விடும். பிறகு மேலே TO என்ற இடத்தில் எந்த மொழிக்கு மாற்றம் செய்ய வேண்டுமோ அதனை தேர்வு செய்யவும். பிறகு Translate என்பதை க்ளிக் செய்யவும்.தமிழுடன் சேர்த்து வங்காளம், குஜராத்தி, தெலுங்கு, கன்னடம் என மொத்தம் ஐந்து மொழிகள் தற்போது சோதனை முறையில் இருக்கின்றன.

சனி, 28 மே, 2011

ஆராய்சி செய்தி எதிர்பார்த்த அளவை விட சந்திரனில் அதிக அளவு தண்ணீர்: விஞ்ஞானிகள் தகவல்

பூமியின் துணை செயற்கைக்கோளான சந்திரனில் நிறைய கனிம வளம் இருப்பதாக முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் தண்ணீர் வளம் உள்ளதா என்பது பற்றி பல தடவை ஆராய்ச்சிகள் செய்த பிறகும் உறுதிபடுத்தப்படாமல் இருந்தது. சந்திரனை ஆய்வு செய்வதற்காக இந்தியா அனுப்பிய சந்திராயன் மிகத்திறமையாக ஆய்வு செய்து சந்திரனில் தண்ணீர் இருப்பதை கண்டுபிடித்தது. அமெரிக்காவின் நாசா விஞ்ஞானிகளும் அதை உறுதி செய்தனர். இதையடுத்து சந்திரனில் என்னென்ன வளங்கள் உள்ளது என்பதை கண்டுபிடிக்க நாடுகளிடம் ஆர்வம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக அமெரிக்கா, சீனா, ரஷியா மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இதற்கிடையே சந்திரனில் நாம் எதிர்பார்ப்பதை விட அதிக தண்ணீர் வளம் உள்ளதாக அமெரிக்காவில் உள்ள கேஸ் வெஸ்டர்ன் ரிசர்வ் யுனிவர்சிட்டி, கர்ஜினி அறிவியல் கழகம், பிரவுன் யுனிவர்சிட்டி விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இதுவரை கணிக்கப்பட்டுள்ள அளவை 100 மடங்கு அதிக சுத்தமான தண்ணீர் நிலாவில் இருப்பதாக விஞ்ஞானிகள் கூறி உள்ளனர். இது சந்திரன் ஆய்வுப் பணியில் ஈடுபட்டுள்ள எல்லா நாட்டு விஞ்ஞானிகளிடமும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

வியாழன், 28 ஏப்ரல், 2011

தமிழ்ப் புத்தகத் தகவல் திரட்டு

பழந்தமிழ் நூல்கள் முதல் தற்போதைய நூல்கள் வரை பல நூல்களை மின்னூல்களாக்கி அவற்றை அழிவிலிருந்து பாதகாத்து வரும் பாராட்டுக்குரிய இணையத்தின் இணைப்புகள்.

தமிழ்ப் புத்தகத் தகவல் திரட்டு
புத்தகங்களை தரவிறக்க...

செவ்வாய், 26 ஏப்ரல், 2011

ஜப்பானில் இறந்தவர்களை தேடும் முயற்சியில் ஈடுபடும் ரோபோ

ஜப்பானில் கடந்த மாதம் ஏற்பட்ட நிலநடுக்கமும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட சுனாமி பேரலையிலும் சிக்கி உயிரிழந்தோரை கடலில் தேடும் பணியில் 2 ரோபோக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
கடந்த 5 நாள்களாக மேற்கொள்ளப்பட்ட பணியில் இதுவரை எவரது சடலமும் கிடைக்கவில்லை என ஜப்பான் அரசு செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். கடலுக்கடியில் தேடும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள இந்த ரோபோக்களில் கமெராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அத்துடன் சோனார் கருவியும் உள்ளது. இரண்டு ரோபோக்களில் ஒன்று ஜப்பானிலும், மற்றொன்று அமெரிக்காவிலும் தயாரிக்கப்பட்டதாகும். இப்பகுதியில் கடலில் சீற்றம் அதிகமாக இருப்பதால் தேடும் பணியில் ஈடுபடுவது சிரமம் என நீச்சல் வீரர்கள் தெரிவித்ததால் ரோபோக்கள் ஈடுபடுத்தப்பட்டன. கடலில் மூழ்கிய காரைக் கண்டுபிடித்த ரோபோக்கள் அதில் உயிரிழந்தோர் எவரேனும் உள்ளனரா என்றும் தேடியது. ரோபோக்கள் எடுத்த படப்பதிவுகள் செய்தியாளர்களுக்கு காட்டப்பட்டன. கடலில் கலந்துள்ள கதிர்வீச்சின் அளவை அறிய மற்றொரு ரோபோ பயன்படுத்தப்பட உள்ளது.

ஓசோன் ஓட்டையால் ஏற்படும் பருவநிலை மாற்றங்கள்

பருவ நிலை மாற்றங்களுக்கு ஓசோனில் விழும் ஓட்டைகள் முக்கியக் காரணங்களாக உள்ளன. இந்த ஓசோன் துளைகள் பூமியின் தென் துருவப் பகுதியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்த ஆய்வு அறிக்கை அறிவியல் பத்திரிக்கையின் 21வது இதழில் வெளியிடப்பட்டுள்ளது. கொலம்பியா பல்கலைகழகத்தின் ஸ்கூல் ஆப் இன்சினியரிங் ஆய்வாளர்கள் ஓசோன் ஓட்டையால் துருவப் பகுதி பாதிப்பை விளக்கி உள்ளனர். பூமிப்பகுதியானது வடதுருவம், தென்துருவம் என ஒரு கற்பனைக் கோடு மூலம் பிரிக்கப்படுகிறது. இதில் ஓசோன் படல ஓட்டையால் தென் துருவ அரை வட்டப் பகுதி முழுவதும் தாக்குதலுக்கு உள்ளாகி இருப்பது தெரியவந்துள்ளது. கடந்த 50 ஆண்டுகளில் இந்தப் பாதிப்பால் மாற்றம் ஏற்பட்டுள்ளது. சூரியனில் இருந்து தீங்கு விளைவிக்கும் புற ஊதாக்கதிர்களை ஓசோன் படலம் உறிஞ்சுகிறது. இதனால் பூமியில் உள்ள உயிர்களுக்கு அபாயம் ஏற்படாத நிலை இருந்தது. கடந்த அரை நூற்றாண்டாக மனிதர்களால் உற்பத்தி ஆன அதி நவீன பொருட்களால் ஓசோன் மண்டலம் பாதிக்கப்படுகிறது. 1989ம் ஆண்டு மாண்ட்ரீல் ஒப்பந்தப்படி குளோரோ ப்ளோரசண்ட் பொருட்கள் பயன்பாட்டில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டுள்ளன. மாண்ட்ரீல் ஒப்பந்தத்தில் தற்போது வரை 196 நாடுகள் கையெழுத்திட்டு உள்ளன. இனிவரும் காலங்களில் சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத நேரத்தில் ஓசோன் படலம் சீராகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சூரிய சக்தியில் இயங்கக்கூடிய "சோலார் விமானம்"

முழுக்க முழுக்க சூரிய ஒளியிலேயே இயங்கும் விமானம் சுவிட்சர்லாந்தில் வெற்றிகரமாக சோதித்து பார்க்கப்பட்டது. சூரிய ஒளியில் இயங்கும் வாகனங்கள், விளக்குகள், சூடேற்றிகள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. சூரிய விமானம் உருவாக்குவதற்கான ஆராய்ச்சி கடந்த 2003ம் ஆண்டில் இருந்தே நடந்து வருகிறது. சுவிட்சர்லாந்தின் லாசான் நகரை சேர்ந்த இகோல் தொழில்நுட்ப கல்வி நிறுவனம் முழுக்க முழுக்க சூரிய சக்தியிலேயே இயங்கும் விமானத்தை உருவாக்கியுள்ளது. அதிக அளவு கனம் இருக்கக் கூடாது என்பதால் கார்பன் பைபர் பொருளால் விமானம் உருவாக்கப்பட்டது. ஒருவர் மட்டுமே செல்லக்கூடிய விமானத்தின் மொத்த எடை 1,600 கிலோ. சூரிய ஒளியில் இருந்து மின்சார சக்தி தயாரிப்பதற்காக 11,600 சூரிய மின்கலங்கள் பயன்படுத்தப்பட்டன. சூரிய ஒளியின் மூலம் லித்தியம் மின்கலங்கள் சார்ஜ் ஏற்றப்பட்டு அதன் மூலம் இன்ஜின் இயக்கப்பட்டது. 10 குதிரைத் திறனுள்ள 4 இன்ஜின்கள் பயன்படுத்தப்பட்டன. சுவிட்சர்லாந்தின் லாசான் நகருக்கு அருகில் உள்ள பேயர்ன் ராணுவ தளத்தில் இதன் சோதனை நடந்தது. 64 கி.மீ வேகத்தில் புறப்பட்ட விமானம் சராசரியாக 70 கி.மீ வேகத்தில் பறந்தது. சீராக பறந்த விமானம் 2 மணி நேர பயணத்துக்கு பிறகு பத்திரமாக தரையிறங்கியது. இதுபற்றி இகோல் தொழில்நுட்ப கல்வி நிறுவன விஞ்ஞானிகள் கூறுகையில்,"பற்றரிகளின் திறன், சோலார் விமானத்தின் திறனை அதிகரிக்க தொடர்ந்து ஆய்வுகள் நடந்து வருகின்றன. உலகையே சுற்றி வரும் சோலார் விமானம் 2014ல் அறிமுகப்படுத்தப்படும்" என்றனர்.

2900 ஆண்டுகளுக்கு முன்பே நடைபெற்ற மூளை அறுவை சிகிச்சை

திபெத்தில் 1998ம் ஆண்டு ஒரு வித்தியாசமான மண்டை ஓடு கிடைத்துள்ளதாகவும், அதை சோதனை செய்ததில் அந்த மண்டை ஓட்டை பிளந்து அறுவை சிகிச்சை செய்ததற்கான அடையாளங்கள் இருந்துள்ளதாகவும் தெரிகிறது. மண்டை ஓட்டை பிளந்து அறுவை சிகிச்சை செய்வது என்பது சமீபத்தில் தான் கண்டுபிடிக்கப்பட்ட மருத்துவ முறையாக கருதப்படுகிறது. ஆனால் அந்த மண்டை ஓட்டை ஆராய்ந்த போது அது ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முந்தையது என்று தெரியவந்தது. அதாவது அந்த காலத்திலேயே அறுவை சிகிச்சை நடந்துள்ளது. இப்போது திபெத்தில் 2900 ஆண்டுகளுக்கு முன்பே மூளை அறுவை சிகிச்சை நடந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்து உள்ளன. பழங்கால புத்தகம் ஒன்றை ஆய்வு செய்த போது இந்த தகவல் கிடைத்து உள்ளது.திபெத்தில் உள்ள லசா பல்கலைக்கழக பேராசிரியர் கர்மா டிரின்லி இந்த தகவலை கண்டறிந்து உள்ளார். அப்போது மூளை அறுவை சிகிச்சை நடந்ததை இந்தியாவில் இருந்து தசோக்யெல் என்ற மருத்துவர் பார்வையிட வந்திருந்ததாகவும் அதில் குறிப்புகள் உள்ளன.

சனி, 19 மார்ச், 2011

முதன் முறையாக புதன் கிரகத்திற்கு நாசா விண்கலம்

அமெரிக்காவின் நாசா விண்வெளி மையத்தின் விண்கலம் சூரியனுக்கு அருகாமையில் உள்ள புதன் கிரக வளையத்திற்கு வந்தது.
இந்த கிரகத்தை சுற்றும் உலக நாடுகளின் முதல் விண்கலம் என்ற பெருமை நாசா விண்கலத்திற்கு கிடைத்துள்ளது. மெசஞ்சர் என்ற இந்த விண்கலம் அமெரிக்க உள்நாட்டு நேரப்படி இரவு 9 மணிக்கு புதன் கிரக வளையத்திற்கு வந்தது. மெசஞ்சர் விண்கலம் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்னர் தனது பயணத்தை துவக்கியது.
மெசஞ்சரின் சாதனை குறித்து நாசா கூறுகையில்,"சூரியக் குடும்பத்தில் உள்பகுதியில் உள்ள புதன் கிரகத்திற்கு தங்களது விண்கலம் நுழைந்துள்ளது. இது பொறியியல் மற்றும் அறிவியல் சாதனை நிகழ்வாகும்.
அடுத்த சில வாரங்களுக்கு கடுமையாக வெப்பம் கொண்ட புதன் கிரக சூழலை விண்கலம் எதிர்கொள்ளும் வகையில் ஆய்வாளர்கள் கவனம் செலுத்துவார்கள். மார்ச் 23 ம் திகதி விண்கல கருவிகள் சோதனை செய்யப்பட்டு முடுக்கி விடப்படுகிறது. ஏப்ரல் 4 ம் திகதியன்று மெசஞ்சர் விண்கலம் தனது பயணத்தின் அறிவியல் நிலையை துவக்கும்.
மெசஞ்சர் விண்கலம் சூரியனில் இருந்து 280 லட்சம் மைல் தொலைவிலும், பூமியல் இருந்து 960 லட்சம் மைல் தொலைவிலும் உள்ளது. இந்த விண்கலம் புதன் கிரகத்தை ஆய்வு செய்ய 7 அறிவியல் உபகரணங்களை கொண்டுள்ளது.
மெசஞ்சர் விண்கலம் 2004 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தனது பயணத்தை துவக்கி 490 கோடி மைல் தூரத்தை கடந்துள்ளது. பல்வேறு கடுமையான சூழல்களை எதிர் கொண்டு புதன் கிரக வளையத்திற்குள் இந்த விண்கலம் நுழைந்துள்ளது என நாசா அறிவித்தது.

ஐ போனை மிஞ்சிய ஆண்ட்ராய்ட்!

விரைவான செயல்பாடு மற்றும் இன்டர்நெட் பக்கங்களை அதி வேகமாக லோட் செய்வதில் ஆப்பிளின் ஐபோன் 4-ஐ மிஞ்சிவிட்டது கூகுளின் ஆண்ட்ராய்ட் நெக்சஸ் ஸ்மார்ட்போன் என அறிவித்துள்ளது பிரபல சாப்ட்வேர் நிறுவனம். செல்போன் உலகில் மிக உயர்ந்த அந்தஸ்தை அனுபவித்து வருகிறது ஆப்பிளின் ஐ போன் 4 மாடல். ஆனால் இந்த செல்போனை விட சிறந்ததாக கூகுளின் ஆன்ட்ராய்ட் நெக்சஸ் ஸ்மார்ட்போன் வந்துவிட்டது. இதுகுறித்து கனடாவின் பிரபல சாப்ட்வேர் நிறுவனமான பிளேஸ் சாப்ட் மேற்கொண்ட ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதில் ஐபோனை விட, ஆன்ட்ராய்ட் போன் இன்டர்நெட் செயல்பாட்டில் அதிக வேகம் கொண்டதாக தெரிய வந்துள்ளது. ஐபோனை விட ஆன்ட்ராய்ட் போன் 84 சதவீதம் அதிக வேகமாக இன்டர்நெட் பக்கங்களைத் திறப்பதாக ப்ளேஸ் தெரிவித்துள்ளது. வயர்லெஸ் நெட்வொர்க்கில் ஆப்பிள் போனை விட ஆன்ட்ராய்ட் போன் 52 சதவீதம் அதிக வேகத்தில் இயங்குவதாகவும் தெரிய வந்துள்ளது. வேகமான இன்டர்நெட் செயல்பாடு குறித்து ஆப்பிள் கவலைப்படவில்லை. ஆனால் கூகுள் அந்த விஷயத்தில் மிகுந்த கவனம் செலுத்துகிறது என மேலும் இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

மர்ம நகரமான அட்லாண்டிஸ் கடலுக்கு அடியில் கண்டுபிடிப்ப

பல்லாயிரம் நூற்றாண்டுகளுக்கு முன்னர் கடலுக்கு அடியில் மூழ்கிப்போனதாய் நம்பப்படும் மர்ம நகரான அட்லாண்டிஸின் எச்சங்களை கண்டுபிடித்துள்ளதாக அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர்.இவர்கள் இந்நகரின் எச்சங்களை தென் ஸ்பானியவில் கண்டுபிடித்துள்ளதாகக் குறிப்பிடுகின்றனர். அக்காலத்தில் ஏற்பட்ட சுனாமியில் இது அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் எனவும் அது ஸ்பானிய காடிஸ் நகரிற்கு வடக்கே கடலடியில் மூழ்கிப்போயுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
செய்மதி புகைப்படங்களின் உதவியுடனேயே ஆய்வாளர்கள் இதனை கண்டுபிடித்துள்ளனர். மேலும் இதன் போது ஆழ் நில செய்மதிகள், டிஜிட்டல் மெப்பிங் முறைகள், நீருக்கு அடியில் உபயோகப்படுத்தப்படும் தொழிநுட்பங்கள் என்பவற்றையும் தாம் பயன்படுத்தியதாக இவ்வாராய்ச்சியை மேற்கொண்ட ஹார்ட்போர்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ரிச்சார்ட் ப்ரிஹண்ட் கிராக் தெரிவித்துள்ளார்.
கிரேக்க தத்துவ அறிஞரான பிளேட்டோ(கி.மு 428/427-348/347) தமது "திமேயஸ்" மற்றும் "கிரேட்டஸ்" எனும் உரையாடல்களில் அட்லாண்டிக் பெருங்கடலில் இருந்த லிபியா மற்றும் துருக்கியின் பெரும்பகுதியும் இணைந்த நிலப்பரப்பைக் காட்டிலும் அதிகமான நிலப்பரப்பினைக் கொண்ட தீவாக அட்லாண்டிஸைக் குறிப்பிடுகிறார்.
அத்தீவில் நாகரிகத்தில் முதிர்ச்சியடைந்த ஒரு சமுதாயம் வாழ்ந்ததாகவும் அவர்கள் பல தேசங்களைத் தம் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்ததாகவும், பின்னர் அதீத செல்வச் செழிப்பாலும் அதிகாரத்தாலும் அச்சமுதாயம் சீரழிந்ததாகவும், அதனைத் தொடர்ந்து பெரும் நிலநடுக்கங்களாலும் எரிமலைச் சீற்றத்தாலும் அத்தீவு அழிந்ததாகவும் பிளேட்டோ கூறுகிறார்.
அட்லாண்டிஸ் குறித்த இத்தகவல்களை கிரேக்கச் சட்டங்களை உருவாக்கிய ஸோலான் என்பவரிடம் எகிப்திய ஞானிகள் கூறுவதாக பிளேட்டோ கூறுகிறார். இக்குறிப்புகள் பிளேட்டோவின் காலத்தில் வாழ்ந்த அரிஸ்டாட்டிலால்(கி.மு.384-322) கற்பனையானவை எனக் கூறப்பட்டாலும், பிளேட்டோவிற்கு பின்னர் இன்று வரையிலும் அட்லாண்டிஸைத் தேடுவோர் உள்ளனர்.

மேலும் பலர் இதனைப் பற்றி குறிப்பிட்டுள்ளனர். ஆரம்பத்தில் இந்நகரானது கிரேக்க தீவான சென்டோரினி, இத்தாலிய தீவுகளான சார்டினியா மற்றும் சைப்பிரஸில் இருக்கலாம் என பலரால் வெவ்வேறு விதமாக தெரிவிக்கப்பட்டு வந்தது.
தற்போது அந்நகரின் வாயில் இருந்ததாக கருதப்படும் பாரிய தூண் ஒன்றையும் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். மேலும் பல ஆதாரங்களையும் அவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

செவ்வாய், 22 பிப்ரவரி, 2011

கணிதம், விஞ்ஞானம் மற்றும் எந்த பாடங்களையும் கற்றுக்கொள்வதற்கு உதவும் இணையத்தளங்கள்

தற்காலத்தில் மாணவர்களுக்கு அறிவை மேம்படுத்திக்கொள்வதற்கு இணையமே முக்கிய ஆதாரமாக இருக்கிறது.சிலர் இணையத்திலேயே பாடங்களை படித்து முடிக்கவும் செய்கிறார்கள். இதேபோல் இணையத்தில் கணிதம், விஞ்ஞான பாடங்களையும் மற்றும் ஏனைய பாடங்களையும் கற்பதற்கு உதவி புரிகின்ற  இணையத்தளங்களைப்பற்றிய தகவல்கள் இங்கே.

கணித சிக்கல்களை தீர்ப்பதற்கு உதவுகிறது இந்த தளம்.
எந்த கணிப்பீடாயினும் அதன் விபரங்களை கொடுத்ததும் ஒவ்வொரு படிமுறையாக காட்டுகிறது இந்த தளம்.
இணைப்பு: http://www.wolframalpha.com/

இயற்கணிதம்(algebra),  நுண்கணிதம்(calculus),  முக்கோணவியல்(trigonometry),  புள்ளியியல்(statistics)  போன்றவற்றையும் மற்றும் ஏனைய கணித சமன்பாடுகளின் பிரச்சனைகளையும் தீர்க்க உதவுகிறது இத்தளம்
இணைப்பு: http://www.mathway.com/

வேறு மொழிகளை கற்றுக்கொள்வதற்கும், உங்கள் பேச்சு திறமையை வளர்த்துக் கொள்வதற்கும் உதவுகிறது இந்த தளம்.
இணைப்பு: http://www.babbel.com/

வேதியியல்(chemistry) பாடங்களை கற்பவர்களுக்கு
இணைப்பு: http://www.ptable.com/


பொருளியல்(Economics), வணிகம்(Business), அரசியல்(Politics), நிறுவனம்(Enterprise), சட்டம்(Law), சமூகவியல்(Sociology), வரலாறு(History), சமயங்கள்(Religious) பாடங்களுக்குரிய குறிப்புகளை வழங்குகிறது இந்த தளம்
இணைப்பு: http://www.tutor2u.com/

ஆங்கில மொழித்திறமையை வளர்த்துக்கொள்வதற்கு உதவுகிறது இந்த தளம்.
இணைப்பு: http://verbalearn.com/

வெள்ளி, 4 பிப்ரவரி, 2011

தமிழ்நாட்டில் தினமும் 130 குழந்தைகள் பலி

யுனிசெப் நிறுவனம் இந்தியா முழுவதும் குழந்தைகளின் ஆரோக்கியம் பற்றிய கணக்கெடுப்பு நடத்தியது.அதில் தமிழ்நாட்டில் கிருமிகள் தாக்குதல் மற்றும் சத்து குறைபாடுகள் காரணமாக குழந்தைகள் இறப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. நாள் ஒன்றுக்கு 130 குழந்தைகள் வரை பலியாகின்றன. இதே போல் நாடு முழுவதும் கிருமி தாக்குதல் மற்றும் சத்து குறைபாடு காரணமாக 5 ஆயிரம் குழந்தைகள் இறப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இந்த தகவல்களை யுனி செப் நிறுவனத்தின் இந்திய பிரதிநிதி ஏஞ்செலா வால்க்கர் தெரிவித்தார். அவர் கூறியதாவது:-

இந்தியாவில் குழந்தைகளுக்கு சத்து குறைபாடு பிரச்சினை உள்ளது. இது ஆப்பிரிக்க நாடுகளை விட மோசமாக உள்ளது. பாதி குழந்தைகள் சத்து குறைபாடு காரணமாக பாதிக்கப்படுகின்றன. குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைகிறது. இதை தவிர்க்க வேண்டுமானால் பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டும். அதன் பிறகு சத்தான உணவு வகைகள் கொடுக்க வேண்டும். இது குழந்தை இறப்பை தடுக்கும். இதற்கு மக்களிடையே விழிப்புணர்வு அவசியம். இவ்வாறு அவர் கூறினார்.

புதன், 2 பிப்ரவரி, 2011

ஜெட்டா பைட் என்றால் என்ன தெரியுமா ?

மெகா பைட், கிகா பைட், டெரா பைட் தெரியும் அது என்ன ஜெட்டா  பைட்? டிஜிடல் அலகுக்கு மிக அதிகபட்ச எண்ணிக்கையைக் குறிக்க தற்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் வார்த்தைதான் ஜெட்டா பைட் (Zettaa Byte). டிஜிடல் உலகின் அதிகபட்ச்ச டிஜிடல் அலகாக இதுவரை இருந்த பெட்டா பைட்டை (peta byte) முந்திக்கொண்டு வந்துள்ளது இந்த ஜெட்டா பைட். ஒரு ஜெட்டா பைட் என்பது ஒரு மில்லியன் பெட்டா பைட் ஆகும். அல்லது 1,000,000,000,000,000,000,000 தனி பைட்டுகள் ஆகும்.

இதுவரை மனித இனத்தின் மொத்த டிஜிடல் வெளியீடு சுமார் எண்பது லட்சம் பெட்டா பைட்டுகளாக உள்ளது. (ஒரு பெட்டா பைட் என்பது ஒரு மில்லியன் கிகா பைட்டுகள்) ஆனால் இது இந்த வருடம் 1.2 ஜெட்டா  பைட்களைக் கடந்துவிடும் என்று கருதப்படுகிறது. புரியும் வகையில் சொல்லப்போனால், உலகின் தற்போதைய டிஜிட்டல் கொள்ளளவு என்பது, 75 பில்லியன் (ஒரு பில்லியன் = நூறு கோடி) ஆப்பிள் ஐ பேட்களில் சேமிக்க இயலுமான தகவல்களாகும். அல்லது ஒரு நூற்றாண்டு முழுவதும் உலகின் அனைவரும் மெசேஜ் பண்ணிக் கொண்டும் ட்விட்டரில் ட்விட்டிக்கொண்டும் இருந்தால் எத்தனை தகவல் வெளியாகுமோ அத்தனை அளவென கொள்ளலாம்.

டிஜிட்டல் தகவல் உலகின் இந்த அதிவேகப் பெருக்கத்திற்கு சமூக வெப் சைட்டுகள், ஆன்லைன் வீடியோ, டிஜிட்டல் போட்டோக்ராபி மற்றும் மொபைல் போன்கள் ஆகியவையே காரணம் என்று உலகின் டிஜிடல் வெளியீட்டினை கவனிக்கும் IDC சொல்கிறது. உலகின் எழுபது சதவிகித தகவல்கள் தனிநபர்களால் உருவாக்கப்படுபவையே என்றும் யூ டியூப், பிளிக்கர் போன்ற நிறுவனங்கள் அவற்றை சேமிக்கின்றன என்றும் இந்த IDC தொழிநுட்ப நிறுவனம் தெரிவிக்கிறது.

90 கோடி கணிணிகளுக்கு ஆபத்து - மைக்ரோ சாஃப்ட் !

உலகம் முழுதுமுள்ள கணிணிகளில் இன்டர்நெட் எக்ப்ளோரர் எனும் உலாவியை பயன்படுத்தும் 90 கோடி கணிணிகளுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக மைக்ரோ சாஃப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. இன்டர்நெட் எக்ப்ளோரர் உலாவியை பயன்படுத்துவோரின் கணிணியிலிருந்து அவர்களது ரகசிய விவரங்களும், சுய விவரங்களும் திருடப்பட்டுள்ளதாக டெய்லி மெயில் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது. புதிதாக பரவி வரும் வைரஸால் வின்டோஸ் XP (SP3), வின்டோஸ் விஸ்டா, வின்டோஸ் 7, வின்டோஸ் சர்வர் 2003 மற்றும் வின்டோஸ் சர்வர் 2008 (R2) ஆகிய வின்டோஸ் இயங்குதளங்கள் பாதிக்கப்பட்டு வருவதாகவும், இருந்த போதிலும் நெருப்பு நரி (ஃபையர் ஃபாக்ஸ்), கூகுள் க்ரோம் மற்றும் சஃபாரி போன்ற உலாவிகளை பயன்படுத்தி வரும் பயனாளிகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்றும் அந்த பத்திரிக்கை செய்தியில் கூறப்பட்டுள்ளது.
வின்டோஸ் இயங்குதளத்திற்குள்ளேயே இந்த வைரஸ் பரவுவதாகவும், இதனைத் தடுக்க எடுத்து வரும் முயற்சிகள் இதுவரை பலனளிக்கவில்லை என்றும் மைக்ரோஸாஃப்ட் நிறுவனம் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வியாழன், 20 ஜனவரி, 2011

ஜிமெயிலில் தவறுதலாக அனுப்பப்பட்ட மின்னஞ்சலை மீளப்பெறுவது எப்படி?

ஜிமெயிலில் தவறுதலாக அனுப்பிய ஒரு மின்னஞ்சலை உடனே நிறத்துவதற்கு ஒரு வசதியுண்டு. முதலில் ஜிமெயிலில் இந்த வசதியை இயக்குவதற்கு ஜிமெயிலில் உள்நுழைந்து, “Labs” பக்கத்திற்குச் சென்று,  “Undo Send” சேவையைத் தேர்ந்தெடுத்துச் செயல்படுத்தவும்.  (ஜிமெயில் பக்கத்தில், மேலே வலது மூலையில்,  பயனர் பெயர், “Setting” இடையில்,  பச்சை  நிற குடுவை  ஒன்று இருக்கும்.  அதுவே, “Labs” பக்கத்திற்குச் செல்லும் இணைப்பாகும்.) வழக்கமாக மின்னஞ்சலை அனுப்பிய பிறகு, Mail Send Successfully என்ற செய்தி வரும்.  நீங்கள் இந்த வசதியை இயக்கியிருந்தால், மின்னஞ்சல், அனுப்பிய பிறகு, “Your Message has been send, Undo” என்ற இணைப்பு வரும்.  மின்னஞ்சல் திரும்பப் பெறுவதாயின், இந்த இணைப்பைச் சொடுக்கினால் போதும்.