நாட்டு மக்களின் பல்வேறு கேள்விகளுக்கு கூகுள் பிளஸ்சின் மூலம் குஜராத் முதல்வர் நரேந்திர தாமோதர்தாஸ் மோடி பதிலளித்ததால், கூகுள் சர்வரே, சில நிமிடம் ஸ்தம்பிக்கும் நிலை ஏற்பட்டது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள மக்களின் கேள்விக்ளுக்கு , குஜராத் முதல்வர் நரேந்திர மோடி கூகுள் பிளசில் நேரடியாக பதிலளித்தார். இந்நிகழ்ச்சி, யூடியூபில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம், இணையதள தொழில்நுட்பத்தின் மூலம் நாட்டு மக்களை சந்தித்த முதல் அரசியல் பிரமுகர் என்ற பெருமையை நரேந்திர மோடி பெற்றுள்ளார். சர்வதேச அளவில், இப்ட்டியலில், அமெரிக்க அதிபர் ஓபாமா, ஆஸ்திரேலிய பிரதமர் ஜூலியா கிலார்டிற்கு பிறகு நரேந்திர மோடியும் இணைந்துள்ளார்.
புதன், 5 செப்டம்பர், 2012
நரேந்திர மோடியால் ஸ்தம்பித்த கூகுள் சர்வர்
சனி, 30 ஜூன், 2012
விண்வெளியில் பறந்தபடி சாட்டிங்: கூகுளின் புதிய சாதனை
கூகுளின் ஓன்லைன் LEGO Builders அறிமுகம்
LEGO எனப்படும் குற்றிகளைப் பயன்படுத்தி உருவங்களை ஒன்லைனில் உருவாக்கும் புதிய முறையினை கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த நவீன தொழில்நுட்பமானது கூகுள் குரோம் உலாவிகளில் மட்டுமே செயற்படக்கூடியதாகக் காணப்படுவதுடன், நவீன இணையத் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு முப்பரிமாண சூழலில் விரும்பிய பொருட்களை உருவாக்கிக்கொள்ளவும் முடியும். இவ்வாறு உருவாக்கப்பட்ட வடிவத்தினை பின்னர் நமது வசதிக்கேற்ப தனித்தனிப்படங்களாக மாற்றி மின்னஞ்சலுக்கு அனுப்புவதன் மூலம் குறித்த உருவத்தினை நாம் தரவிறக்கம் செய்து கொள்ளவும் முடியும்.
Leap: கைவிரல்களால் கணணியை இயக்கும் புதிய தொழில்நுட்பம்
சமூக வலைத்தளத்தை தொடங்கியது மைக்ரோசாப்ட்
உலகின் மிகப்பெரிய மென்பொருள் நிறுவனமான மைக்ரோசாப்ட், சமூக வலைத்தளம் ஒன்றை தொடங்கியுள்ளது. இதற்கு முன்பு, So.Cl என்ற முகவரியில் 2011ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் தனியார் பீட்டாக செயற்பட்டு வந்தது. இது தற்போது அனைவராலும் பயன்படுத்தக் கூடிய வகையில் மாற்றப்பட்டுள்ளது. மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ஆய்வுகள், சமூக தேடல்கள் உள்ளிட்ட வசதிகளை பெருக்குவதற்காக இந்த வலைத்தளம் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு இயங்குதளங்களை ஒருங்கே கொண்ட புதிய டேப்லட்கள்
அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்டு பயனர்கள் மத்தியில் பலத்த வரவேற்பைப் பெற்ற ஒரு சாதனம் தான் டேப்லெட் கணணிகள் ஆகும். இவை பொதுவாக விண்டோஸ், அப்பிளின் மக், அன்ரோயிட் இயங்குதளங்களில் செயற்படக்கூடியவையாகக் காணப்பட்ட போதிலும் தனித்தனியாகவே இந்த இயங்குதளங்கள் நிறுவிப் பாவிக்கப்பட்டன. ஆனால் தற்போது Asus நிறுவனம் இரட்டை இயங்குதளங்களைக் கொண்டதும் இரண்டு பூட் ஒப்சனைக் கொண்டதுமான புதிய டேப்லட்களை அறிமுகப்படுத்துகின்றது. இதில் இயங்குதளங்களாக விண்டோஸ், அன்ரோயிட் ஆகியவை நிறுவப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
கணணி விளையாட்டில் மேலும் ஒரு அற்புதமான தொழில்நுட்பம் அறிமுகம்
பொழுதுபோக்கிற்காகவும், மூளை விருத்தியை அதிகரிக்கவும் அதிகளவானவர்களால் கணணி விளையாட்டுக்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதனால் நாளுக்கு நாள் கணணி விளையாட்டானது புதிய தொழில்நுட்பங்கள் உட்புகுத்தப்பட்டு மெருகூட்டப்பட்டு வருகின்றது. இம்மாற்றங்களின் அடிப்படையில் தற்போது கணணி விளையாட்டுக்களைக் கட்டுப்படுத்துவதற்கென புளூடூத் தொழில்நுட்பத்துடன் கூடிய புதிய தொடுதிரைக் கட்டுப்படுத்திகள்(touchscreen gaming controller) உருவாக்கப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. Ringbow என அழைக்கப்படும் இந் நவீன தொழில்நுட்பமானது அன்ரோயிட் சாதனங்கள் மற்றும் iOS சாதனங்கள் போன்றவற்றில் செயற்படக்கூடியதுடன் ஒருமுறை சார்ச் செய்து தொடர்ச்சியாக ஐந்து மணித்தியாலங்கள் வரை பயன்படுத்தக்கூடியது.
வெள்ளி, 25 மே, 2012
மோட்டரோலாவை கூகுள் கைப்பற்றியது
மோட்டரோலா செல்போன் நிறுவனத்தின் முழுப் பங்கையும் ரூ.68,750 கோடிக்கு
கூகுள் நிறுவனம் கைப்பற்றியது. கடந்த 14 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட
கூகுள் நிறுவனம், தற்போது உலக அளவில் மிகவும் பிரபலமான தேடுதல் தளமாக
விளங்குகிறது. இந்நிறுவனம் செல்போன் தயாரிப்பு நிறவனமான மோட்டரோலாவை வாங்க 9
மாதங்களுக்கு முன் திட்டமிட்டது.
இந்நிலையில், ரூ.68,750 கோடி கொடுத்து மோட்டரோலாவின் முழு பங்கையும் கூகுள் கைபற்றியுள்ளது. மேலும், மோட்டரோலாவின் தலைமை செயல் அதிகாரியாக (சிஇஓ) இருந்த சஞ்சய் ஷா பதவி விலக முடிவு எடுத்ததை தொடர்ந்து, அதன் புதிய தலைமை செயல் அதிகாரியாக டெனிஸ் யூட்சைட் நியமிக்கப்பட்டுள்ளார். இருப்பினும் தங்கள் நிறுவனத்துடன் இணைந்து சஞ்சய் ஷா பணிபுரிவார் என்று கூகுள் சிஇஓ லாரிபேஜ் தெரிவித்தார்.
இந்நிலையில், ரூ.68,750 கோடி கொடுத்து மோட்டரோலாவின் முழு பங்கையும் கூகுள் கைபற்றியுள்ளது. மேலும், மோட்டரோலாவின் தலைமை செயல் அதிகாரியாக (சிஇஓ) இருந்த சஞ்சய் ஷா பதவி விலக முடிவு எடுத்ததை தொடர்ந்து, அதன் புதிய தலைமை செயல் அதிகாரியாக டெனிஸ் யூட்சைட் நியமிக்கப்பட்டுள்ளார். இருப்பினும் தங்கள் நிறுவனத்துடன் இணைந்து சஞ்சய் ஷா பணிபுரிவார் என்று கூகுள் சிஇஓ லாரிபேஜ் தெரிவித்தார்.
விண்டோஸ் 8 - ஜூன் முதல் வாரம் வெளியீடு
பிரபல மென்பொருள் நிறுவனமான மைக்ரோசாப்ட், தனது இயங்குதள வரிசையில் விண்டோஸ் 8வது பதிப்பை முடித்து வெளியிட காத்திருக்கிறது.
தற்போது, நுகர்வோர் முன்னோட்டத்திற்காக விண்டோஸ் 8 இலவச பதிவிறக்கம் வழங்கப்படுகிறது.
குறைகள், கருத்துகளை பயனர்களிடமிருந்து பெறுவதற்காக மைக்ரோசாப்ட் இந்த இலவச பயன்பட்டு வசதியை செய்துள்ளது.
இந்நிலையில், விண்டோஸ் 8 வெளியீடு முன்னோட்டம் வரும் மே மாதம் முதல் வாரம் நடைபெற உள்ளதாக மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது. மேலும், முழு பதிப்பு இந்த ஆண்டின் இரண்டாவது பாதியில் வெளியிட இருப்பதாகவும் கூறப்படுகிறது.
தற்போது, நுகர்வோர் முன்னோட்டத்திற்காக விண்டோஸ் 8 இலவச பதிவிறக்கம் வழங்கப்படுகிறது.
குறைகள், கருத்துகளை பயனர்களிடமிருந்து பெறுவதற்காக மைக்ரோசாப்ட் இந்த இலவச பயன்பட்டு வசதியை செய்துள்ளது.
இந்நிலையில், விண்டோஸ் 8 வெளியீடு முன்னோட்டம் வரும் மே மாதம் முதல் வாரம் நடைபெற உள்ளதாக மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது. மேலும், முழு பதிப்பு இந்த ஆண்டின் இரண்டாவது பாதியில் வெளியிட இருப்பதாகவும் கூறப்படுகிறது.
Knowledge Graph: கூகுள் தேடலின் அடுத்த தலைமுறைக்கான புத்தம் புதிய வசதி...
கூகுள் தேடுபொறி என்றும் முதலிடத்தில் இருப்பதற்கு காரணம் அது
எப்பொழுதும் தனது தேடல் முடிவுகளை மாற்றம் செய்துக் கொண்டே இருப்பது தான்.
தற்போது Knowledge Graph என்ற பெயரில் மேலும் ஒரு பெரிய மாற்றத்தை
செய்துள்ளது கூகுள்.
பொதுவாக தேடல் பொறிகளில் நாம் ஏதாவது வார்த்தைகளை தேடினால் அந்த வார்த்தைகளை குறியீடுகளாக(Keywords) எடுத்துக் கொண்டு அது தொடர்பான இணையப் பக்கங்களை நமக்கு காட்டும். இந்த முறையினை தான் கூகுளும் பின்பற்றி வந்தது.
தற்போது Knowledge Graph என்ற பெயரில் தேடும் வார்த்தைகள் பற்றிய தகவல்களை தேடல் முடிவு பக்கத்தில் பக்கப்பட்டியில்(Sidebar) காட்டப் போகிறது.
உதாரணத்திற்கு Taj Mahal என்று தேடினால் இந்த இரண்டு வார்த்தைகளைக் கொண்ட இணையப் பக்கங்களை தேடல் முடிவில் காட்டும். இனி இவற்றுடன் சேர்த்து பக்கப்பட்டியலில்(Sidebar) Taj Mahal பற்றிய தகவல்களையும், அது தொடர்பான வேறு தேடல்களையும் காட்டும்.
மேலும் Google Knowledge Graph மூலம் பிரபலங்கள், முக்கிய கட்டிடங்கள், முக்கிய அடையாளங்கள்(Landmarks), திரைப்படங்கள், விண்வெளிப் பொருட்கள், கலைப்பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு விசயங்களைப் பற்றி உடனடித் தகவல்களை நாம் பெற்றுக் கொள்ளலாம். இதன் மூலம் நமது நேரம் மிச்சமாகும்.
கூகுளின் அறிவு வரைபடத்தில்(Knowledge Graph) இதுவரை 500 மில்லியன் பொருட்களும்(Objects) 3.5 மில்லியன் தகவல்களும் சேமிக்கப்பட்டுள்ளன.
முதலில் அமெரிக்க பயனாளர்களுக்கு மட்டும் இந்த வசதியை தந்த கூகுள் இப்போது அனைவரும் பயன்படுத்துமாறு செய்துள்ளது.
http://www.thinakkural.com/index.php?option=com_content&view=article&id=14607:knowledge-graph-------&catid=292:it-a-technology&Itemid=463
பொதுவாக தேடல் பொறிகளில் நாம் ஏதாவது வார்த்தைகளை தேடினால் அந்த வார்த்தைகளை குறியீடுகளாக(Keywords) எடுத்துக் கொண்டு அது தொடர்பான இணையப் பக்கங்களை நமக்கு காட்டும். இந்த முறையினை தான் கூகுளும் பின்பற்றி வந்தது.
தற்போது Knowledge Graph என்ற பெயரில் தேடும் வார்த்தைகள் பற்றிய தகவல்களை தேடல் முடிவு பக்கத்தில் பக்கப்பட்டியில்(Sidebar) காட்டப் போகிறது.
உதாரணத்திற்கு Taj Mahal என்று தேடினால் இந்த இரண்டு வார்த்தைகளைக் கொண்ட இணையப் பக்கங்களை தேடல் முடிவில் காட்டும். இனி இவற்றுடன் சேர்த்து பக்கப்பட்டியலில்(Sidebar) Taj Mahal பற்றிய தகவல்களையும், அது தொடர்பான வேறு தேடல்களையும் காட்டும்.
மேலும் Google Knowledge Graph மூலம் பிரபலங்கள், முக்கிய கட்டிடங்கள், முக்கிய அடையாளங்கள்(Landmarks), திரைப்படங்கள், விண்வெளிப் பொருட்கள், கலைப்பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு விசயங்களைப் பற்றி உடனடித் தகவல்களை நாம் பெற்றுக் கொள்ளலாம். இதன் மூலம் நமது நேரம் மிச்சமாகும்.
கூகுளின் அறிவு வரைபடத்தில்(Knowledge Graph) இதுவரை 500 மில்லியன் பொருட்களும்(Objects) 3.5 மில்லியன் தகவல்களும் சேமிக்கப்பட்டுள்ளன.
முதலில் அமெரிக்க பயனாளர்களுக்கு மட்டும் இந்த வசதியை தந்த கூகுள் இப்போது அனைவரும் பயன்படுத்துமாறு செய்துள்ளது.
http://www.thinakkural.com/index.php?option=com_content&view=article&id=14607:knowledge-graph-------&catid=292:it-a-technology&Itemid=463
செவ்வாய், 27 மார்ச், 2012
சட்ட விரோத மருந்து பரிசோதனை 3 ஆண்டில் 1500 பேர் பலி உச்சநீதிமன்றம் கவலை
புதுடெல்லி : நாட்டில் நடைபெறும் சட்டவிரோத மருந்து பரிசோதனையை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மனிதர்களுக்கு புதிய மருந்துகளை அறிமுகப்படுத்தும் முன் அதை பன்னாட்டு நிறுவனங்கள் சோதித்து பார்ப்பது வழக்கம். இது குறித்து உச்சநீதிமன்றத்தில் டாக்டர்கள் குழுவினர் ஒரு பொதுநலன் வழக்கு தாக்கல் செய்தனர். அதில் கூறியிருப்பதாவது:
கடந்த சில ஆண்டுகளாக நாட்டில் உள்ள ஏழைகள், சிறுவர்கள், ஆதிவாசிகள், தலித்கள் என 3 ஆயிரத்து 300க்கும் அதிகமானோரிடம் சட்டவிரோதமாக மருந்து பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. இதில் அரசு டாக்டர்கள் 15 பேர், 10 தனியார் மருத்துவமனைகளைச் சேர்ந்த 40 டாக்டர்கள் ஈடுபட்டனர். மனநலம் பாதிக்கப்பட்ட 233 பேரிடமும், 1,833 குழந்தைகளிடமும் சோதனை நடந்துள்ளது. இதற்காக அரசு டாக்டர்களுக்கு மட்டும் ரூ.5.5 கோடி பணம் வழங்கப்பட்டுள்ளது. இந்த சோதனையில் 3 ஆண்டுகளில் 1500 பேர் பலியாயினர். இதை தடுக்கும் வகையில்,புதிய விதிமுறைகளை பரிந்துரை செய்வதற்கு நிபுணர் குழுவை அமைக்க நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.எம். லோதா, எச்.எல். கோகலே முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. இத்தகவலை கேட்டு கவலையடைந்த நீதிபதிகள், ‘‘ இது குறித்து மத்திய அரசும், இந்திய மருத்துவ கவுன்சிலும் 6 வாரங்களுக்குள் பதில் அளிக்க வேண்டும். விசாரணை ஜூலை 13ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது’’ என்றனர்.
மனிதர்களுக்கு புதிய மருந்துகளை அறிமுகப்படுத்தும் முன் அதை பன்னாட்டு நிறுவனங்கள் சோதித்து பார்ப்பது வழக்கம். இது குறித்து உச்சநீதிமன்றத்தில் டாக்டர்கள் குழுவினர் ஒரு பொதுநலன் வழக்கு தாக்கல் செய்தனர். அதில் கூறியிருப்பதாவது:
கடந்த சில ஆண்டுகளாக நாட்டில் உள்ள ஏழைகள், சிறுவர்கள், ஆதிவாசிகள், தலித்கள் என 3 ஆயிரத்து 300க்கும் அதிகமானோரிடம் சட்டவிரோதமாக மருந்து பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. இதில் அரசு டாக்டர்கள் 15 பேர், 10 தனியார் மருத்துவமனைகளைச் சேர்ந்த 40 டாக்டர்கள் ஈடுபட்டனர். மனநலம் பாதிக்கப்பட்ட 233 பேரிடமும், 1,833 குழந்தைகளிடமும் சோதனை நடந்துள்ளது. இதற்காக அரசு டாக்டர்களுக்கு மட்டும் ரூ.5.5 கோடி பணம் வழங்கப்பட்டுள்ளது. இந்த சோதனையில் 3 ஆண்டுகளில் 1500 பேர் பலியாயினர். இதை தடுக்கும் வகையில்,புதிய விதிமுறைகளை பரிந்துரை செய்வதற்கு நிபுணர் குழுவை அமைக்க நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.எம். லோதா, எச்.எல். கோகலே முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. இத்தகவலை கேட்டு கவலையடைந்த நீதிபதிகள், ‘‘ இது குறித்து மத்திய அரசும், இந்திய மருத்துவ கவுன்சிலும் 6 வாரங்களுக்குள் பதில் அளிக்க வேண்டும். விசாரணை ஜூலை 13ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது’’ என்றனர்.
பிரிவு:
இணையத்தில் படித்தவை,
நாட்டு நடப்புகள்
கூகுள் தேடலின் சிறப்பம்சங்கள்
மக்களுக்கு முதன் முதலில் பிரபலமான தன் தேடல் சாதனத்தின் நற்பெயரை தக்க வைத்துக் கொள்ள கூகுள் ஏதேனும் வசதிகளைத் தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகிறது.கூகுள் தேடல் விண்டோவினை கால்குலேட்டர் விண்டோவாகவும் பயன்படுத்தலாம். சயின்டிபிக் கால்குலேட்டராகப் பயன்படுத்தக்கூடிய வகையில் இது தரப்படுத்தப்பட்டுள்ளது.
94/36*(sqrt 34)^3 என்று கொடுத்தாலும் சரியான விடை கிடைக்கும். சில கணக்கிடும் அடையாளங்களுக்குச் சொற்களையும் தரலாம். எடுத்துக்காட்டாக 96 divided by 36 times (sqrt34)^3 என்றும் தரலாம்.
சில அலகுகளுக்கிடையே மாற்றங்களையும் இதில் கண்டறியலாம். mm to inch, Fahrenheit to Celsius எனக் கொடுத்து யூனிட் மாற்றத்தையும் அறியலாம்.
ஒரு சிலர் நாம் எதனைக் கொடுத்தாலும் சரியாக அதனை மட்டும் கொடுக்காமல் சார்ந்த அனைத்தையும் தருகிறதே என்று பலர் இது குறித்து சொல்வதைக் கேட்கலாம். நம் தேடல்களைக் குறிப்பிட்ட ஒன்றின் அடிப்படையில் மட்டும் கிடைக்கும்படி அமைக்கலாம்.
அவற்றில் சில:
+ என்று கொடுத்தால் சில குறிப்பிட்ட சொற்களைக் குறிப்பாகத் தேடும் படி அமைக்கலாம். எ.கா.––netbook
+11.6 +ion- (மைனஸ் அடையாளம்) கொடுத்தால் குறிப்பிடும் சொற்களைத் தவிர்த்து தேடுக என்று பொருள். எ.கா. – gaming keyboard logitech
* இதனை கம்ப்யூட்டர் சார்ந்த சொற்களுடன் குறிப்பிடுவார்கள். அதாவது தெரியாத சொற்களுக்கான அடையாளம். traditional * food என்று கொடுத்தால்(*) இந்த அடையாளம் உள்ள இடத்தில் வேறு எந்த சொல்லையும் சேர்த்து தேடிக் கொடு என்று பொருள்.
~ இந்த அடையாளம் கொடுத்தால் அடுத்துள்ள சொல் வழக்கமாக எந்த சொற்களுடன் ஜோடியாகப் பயன்படுத்தப்படுமோ அவை எல்லாவற்றையும் தேடி எடுத்துக்கொடு என்று கட்டளை அமைக்கிறோம். எ.கா. first computer build ~help எனக் கொடுத்தால் அது அனைத்து வகையான ஹெல்ப் வகைகளும் பட்டியலிடப்படும்.
.. குறிப்பிட்ட எண் வரிசை தொடர்ச்சியாக வேண்டுமா? எடுத்துக்காட்டாக விலை ரேஞ்ச், திகதி ஆகியவற்றைக் குறிப்பிடலாம். எ.கா. – halo pc $0..$15
குறிப்பிட்ட கோப்பு வகைகளை மட்டும் தேடிக் கொடுக்கும்படி filetype: என்ற சொல் கொண்டு தேடலை அமைக்கலாம். எடுத்துக்காட்டாக filetype: pdf எனத். தரலாம்.
ஓர் இணையத்தளத்தினைத் தேடக் கட்டளை கொடுக்கையில் அதே பொருளில் உள்ள மற்ற தளங்களைக் காட்டும்படியும் தேடலை அமைக்கலாம். எடுத்துக்காட்டாக related:sciencetv.com என அமைக்கலாம்.
site: என்ற சொல் கொடுத்து குறிப்பிட்ட தளத்தில் மட்டும் ஒன்றைத் தேடும்படி அமைக்கலாம். எடுத்துக்காட்டாக mango site:vegetables.com எனக் கொடுத்து அந்த தளத்தில் மட்டும் இந்த சொல் எங்கு உள்ளது எனத் தேடலாம்.
94/36*(sqrt 34)^3 என்று கொடுத்தாலும் சரியான விடை கிடைக்கும். சில கணக்கிடும் அடையாளங்களுக்குச் சொற்களையும் தரலாம். எடுத்துக்காட்டாக 96 divided by 36 times (sqrt34)^3 என்றும் தரலாம்.
சில அலகுகளுக்கிடையே மாற்றங்களையும் இதில் கண்டறியலாம். mm to inch, Fahrenheit to Celsius எனக் கொடுத்து யூனிட் மாற்றத்தையும் அறியலாம்.
ஒரு சிலர் நாம் எதனைக் கொடுத்தாலும் சரியாக அதனை மட்டும் கொடுக்காமல் சார்ந்த அனைத்தையும் தருகிறதே என்று பலர் இது குறித்து சொல்வதைக் கேட்கலாம். நம் தேடல்களைக் குறிப்பிட்ட ஒன்றின் அடிப்படையில் மட்டும் கிடைக்கும்படி அமைக்கலாம்.
அவற்றில் சில:
+ என்று கொடுத்தால் சில குறிப்பிட்ட சொற்களைக் குறிப்பாகத் தேடும் படி அமைக்கலாம். எ.கா.––netbook
+11.6 +ion- (மைனஸ் அடையாளம்) கொடுத்தால் குறிப்பிடும் சொற்களைத் தவிர்த்து தேடுக என்று பொருள். எ.கா. – gaming keyboard logitech
* இதனை கம்ப்யூட்டர் சார்ந்த சொற்களுடன் குறிப்பிடுவார்கள். அதாவது தெரியாத சொற்களுக்கான அடையாளம். traditional * food என்று கொடுத்தால்(*) இந்த அடையாளம் உள்ள இடத்தில் வேறு எந்த சொல்லையும் சேர்த்து தேடிக் கொடு என்று பொருள்.
~ இந்த அடையாளம் கொடுத்தால் அடுத்துள்ள சொல் வழக்கமாக எந்த சொற்களுடன் ஜோடியாகப் பயன்படுத்தப்படுமோ அவை எல்லாவற்றையும் தேடி எடுத்துக்கொடு என்று கட்டளை அமைக்கிறோம். எ.கா. first computer build ~help எனக் கொடுத்தால் அது அனைத்து வகையான ஹெல்ப் வகைகளும் பட்டியலிடப்படும்.
.. குறிப்பிட்ட எண் வரிசை தொடர்ச்சியாக வேண்டுமா? எடுத்துக்காட்டாக விலை ரேஞ்ச், திகதி ஆகியவற்றைக் குறிப்பிடலாம். எ.கா. – halo pc $0..$15
குறிப்பிட்ட கோப்பு வகைகளை மட்டும் தேடிக் கொடுக்கும்படி filetype: என்ற சொல் கொண்டு தேடலை அமைக்கலாம். எடுத்துக்காட்டாக filetype: pdf எனத். தரலாம்.
ஓர் இணையத்தளத்தினைத் தேடக் கட்டளை கொடுக்கையில் அதே பொருளில் உள்ள மற்ற தளங்களைக் காட்டும்படியும் தேடலை அமைக்கலாம். எடுத்துக்காட்டாக related:sciencetv.com என அமைக்கலாம்.
site: என்ற சொல் கொடுத்து குறிப்பிட்ட தளத்தில் மட்டும் ஒன்றைத் தேடும்படி அமைக்கலாம். எடுத்துக்காட்டாக mango site:vegetables.com எனக் கொடுத்து அந்த தளத்தில் மட்டும் இந்த சொல் எங்கு உள்ளது எனத் தேடலாம்.
பிரிவு:
இணையத்தில் படித்தவை
புதன், 8 பிப்ரவரி, 2012
நிலவின் மறுபக்கம் வெளியீடு
பூமியின் துணைக் கோளான நிலவின் மற்றொரு பக்கத்தை படம்பிடித்து நாசா வெளியிட்டுள்ளது.
கடந்த செப்டம்பர் மாதம் நாசா அனுப்பிய கிரெய்ல் செயற்கைகோள் இந்த புகைப்படம் மற்றும் வீடியோவை எடுத்து அனுப்பியுள்ளது.
இதன் மூலம் பூமியில் இருந்து யாரும் பார்த்திடாத நிலவின் கருமையான முகத்தை நாசா உலகிற்கு வெளியிட்டுள்ளது.
இந்த இருண்ட பகுதி பல மேடு பள்ளங்கள் நிறைந்ததாகக் காணப்படுவதாக நாசா தெரிவித்துள்ளது.
கடந்த செப்டம்பர் மாதம் நாசா அனுப்பிய கிரெய்ல் செயற்கைகோள் இந்த புகைப்படம் மற்றும் வீடியோவை எடுத்து அனுப்பியுள்ளது.
இதன் மூலம் பூமியில் இருந்து யாரும் பார்த்திடாத நிலவின் கருமையான முகத்தை நாசா உலகிற்கு வெளியிட்டுள்ளது.
இந்த இருண்ட பகுதி பல மேடு பள்ளங்கள் நிறைந்ததாகக் காணப்படுவதாக நாசா தெரிவித்துள்ளது.
பிரிவு:
இணையத்தில் படித்தவை
2200 ஆண்டுகளுக்கு முன்பே தோன்றிய புற்றுநோய்: ஆய்வில் தகவல்
2200 ஆண்டுகளுக்கு முன்பே புற்றுநோய் தோன்றியிருப்பது ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
எகிப்து தலைநகர் கெய்ரோவில் உள்ள அமெரிக்கன் பல்கலைக்கழக பேராசிரியர் சலிமா இக்ரம். இவரது தலைமையில் போர்ச்சுகல் தலைநகர் லிஸ்பனில் மம்மிகள் குறித்த ஆய்வு கடந்த 2 ஆண்டுகளாக நடந்தது.
40 வயதில் இறந்தவரது மம்மியை வைத்து தீவிரமாக ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வில் கிடைத்த தகவல்கள் பற்றி சலிமா கூறியதாவது: நாங்கள் ஆய்வு செய்தது ஒரு ஆண் மம்மி.
அவர் 2,200 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர். 40 வயதில் சிறுநீர் குழாயில் ஏற்பட்ட புற்றுநோயால் இறந்திருக்கிறார். இந்த புற்றுநோயால் பாதிக்கப்பட ஒருவரது உணவு முறை, பழக்க வழக்கங்கள், பரம்பரை பாதிப்புகள் என பல காரணங்கள் உள்ளன.
அந்த காலத்தில் பதப்படுத்தப்பட்ட உணவுகள் அதிகம் இருந்திருக்கவில்லை. இயற்கை உணவுகளையே மக்கள் பெரும்பாலும் சாப்பிட்டனர். மக்கள்தொகை குறைவு என்பதால் சூற்றுச்சூழலும் நன்றாகவே இருந்திருக்கும்.
இவற்றைக் கொண்டு பார்க்கும் போது முழுக்க முழுக்க பரம்பரை காரணத்தாலேயே அந்த மம்மிக்கு புற்றுநோய் உருவாகியிருப்பது தெளிவாகிறது என்றார்.
எகிப்து தலைநகர் கெய்ரோவில் உள்ள அமெரிக்கன் பல்கலைக்கழக பேராசிரியர் சலிமா இக்ரம். இவரது தலைமையில் போர்ச்சுகல் தலைநகர் லிஸ்பனில் மம்மிகள் குறித்த ஆய்வு கடந்த 2 ஆண்டுகளாக நடந்தது.
40 வயதில் இறந்தவரது மம்மியை வைத்து தீவிரமாக ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வில் கிடைத்த தகவல்கள் பற்றி சலிமா கூறியதாவது: நாங்கள் ஆய்வு செய்தது ஒரு ஆண் மம்மி.
அவர் 2,200 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர். 40 வயதில் சிறுநீர் குழாயில் ஏற்பட்ட புற்றுநோயால் இறந்திருக்கிறார். இந்த புற்றுநோயால் பாதிக்கப்பட ஒருவரது உணவு முறை, பழக்க வழக்கங்கள், பரம்பரை பாதிப்புகள் என பல காரணங்கள் உள்ளன.
அந்த காலத்தில் பதப்படுத்தப்பட்ட உணவுகள் அதிகம் இருந்திருக்கவில்லை. இயற்கை உணவுகளையே மக்கள் பெரும்பாலும் சாப்பிட்டனர். மக்கள்தொகை குறைவு என்பதால் சூற்றுச்சூழலும் நன்றாகவே இருந்திருக்கும்.
இவற்றைக் கொண்டு பார்க்கும் போது முழுக்க முழுக்க பரம்பரை காரணத்தாலேயே அந்த மம்மிக்கு புற்றுநோய் உருவாகியிருப்பது தெளிவாகிறது என்றார்.
பிரிவு:
இணையத்தில் படித்தவை
உயிரினங்கள் வாழ தகுதியுடைய கிரகம் கண்டுபிடிப்பு
விண்வெளியில் சூரிய குடும்பத்திற்கு வெளியே உயிரனங்கள் வாழ தகுதியுடைய பல்வேறு கிரகங்களை விஞ்ஞானிகள் கண்டுபிடித்து வருகின்றனர்.
ஏற்கனவே உயிரினங்கள் வாழ தகுதியுடைய மூன்று கிரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. தற்போது அந்த வரிசையில் நான்காவதாக புதிய கிரகம் ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. அதற்கு ஜி.ஜே 667 சி என்று பெயரிட்டுள்ளனர்.
இந்த கிரகம் பூமியிலிருந்து 33 ஒளியாண்டுகள் தூரத்தில் உள்ளது. அங்கு நிலவும் தட்பவெப்பநிலை தண்ணீர் இருப்பதை உறுதிப்படுத்துகிறது.
இங்கு சூரியனைவிட மிக குறைந்த அளவே வெப்பம் நிலவுவதால் அங்கு உயிரினங்கள் வாழ முடியும் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
இந்த கிரகம் குறித்து தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஏற்கனவே உயிரினங்கள் வாழ தகுதியுடைய மூன்று கிரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. தற்போது அந்த வரிசையில் நான்காவதாக புதிய கிரகம் ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. அதற்கு ஜி.ஜே 667 சி என்று பெயரிட்டுள்ளனர்.
இந்த கிரகம் பூமியிலிருந்து 33 ஒளியாண்டுகள் தூரத்தில் உள்ளது. அங்கு நிலவும் தட்பவெப்பநிலை தண்ணீர் இருப்பதை உறுதிப்படுத்துகிறது.
இங்கு சூரியனைவிட மிக குறைந்த அளவே வெப்பம் நிலவுவதால் அங்கு உயிரினங்கள் வாழ முடியும் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
இந்த கிரகம் குறித்து தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பிரிவு:
இணையத்தில் படித்தவை
செவ்வாய், 31 ஜனவரி, 2012
குழந்தைகளுக்காவே ஓர் ஆன்ட்ராய்டு டேப்லெட்!
தற்போது டேப்லெட் சந்தை குழந்தைகளைக் குறி வைத்திருக்கிறது என்று சொல்லலாம். ஆம், இப்போது டேப்லெட் தயாரிக்கும் நிறுவனங்கள் குழந்தைகளைக் கவர்வதற்காக அவர்களுக்கென்றே பிரத்யோகமாக டேப்லெட்டுகளைத் தயாரிப்பதில் கவனம் செலுத்த இருக்கின்றன.
அந்த விதத்தில் இப்போது குழந்தைகளுக்காக கூரியோ டேப்லெட் என்ற புதிய டேப்லெட் வருகிறது. இது குழந்தைகளைக் குறிவைத்து தயாரிக்கப்பட்டாலும் பெரியவர்களும் ரசிக்கும் படி இருக்கும்.
இந்த கூரியோ டேப்லெட்டின் முக்கிய அம்சங்கள் என்னவென்றால் இது ஆன்ட்ராய்டு ஐஸ் க்ரீம் சான்டிவிஜ் இயங்கு தளத்தைக் கொண்டிருக்கிறது. இதன் இன்டர்னல் சேமிப்பு 4ஜிபி ஆகும். அதுபோல் இதன் எக்ஸ்டர்னல் சேமிப்பை 32ஜிபி வரை விரிவுபடுத்த முடியும். கேமராவைப் பொருத்தவரை இந்த டேப்லெட் 2 மெகா பிக்சல் முக்கிய கேமராவையும் 0.3 மெகா பிக்சல் முகப்புக் கேமராவையும் கொண்டுள்ளது. அடுத்ததாக இந்த டேப்லெட்டில் யுஎஸ்பி ஸ்லாட்டும் உண்டு.
இந்த கூரியோ டேப்லெட் 7 இன்ச், 8 இனச் மற்றும் 10 இன்ச் என 3 மாடல்களில் வருகிறது. இது ஆன்ட்ராய்டு ஐஸ் க்ரீம் சான்ட்விஜ் இயங்கு தளம் கொண்டிருப்பதால் இந்த டேப்லெட்டை இயக்குவதற்கு சூப்பராக இருக்கும். மேலும் ஆன்ட்ராய்டு அப்ளிகேசன்களைப் பதிவிறக்கம் செய்யவும் முடியும்.
குறிப்பாக இந்த டேப்லெட் 4 முதல் 15 வயதில் இருக்கும் குழந்தைகளுக்காகவே தயாரிக்கப்படுகிறது. இதில் ஒரு சிறப்பு என்னவென்றால் பெற்றோருக்கென்று தனியாக ஒரு அப்ளிகேசனும் இருக்கின்றது. அதன் மூலம் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை தேவையில்லாத இணையதளங்களுக்குள் செல்லாமல் தடுக்க முடியும்.
மற்ற அம்சங்களைப் பார்த்தால் இந்த கூரியோ டேப்லெட் எச்டிஎம்ஐ கனக்டர் மற்றும் யுஎஸ்பி சாக்கெட் கொண்டிருப்பதால் இதில் தகவல் பரிமாற்றம் செய்வது மிக எளிதாக இருக்கும். யுஎஸ்பி சாக்கெட் மூலம் கேமரா மற்றும் ஜாய்ஸ்டிக்கை இணைக்க முடியும். அதுபோல் இதன் பேட்டரி 6 மணி நேர இயங்கு நேரத்தை வழங்குகிறது. இதன் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை.
இந்த கூரியோ ட்ப்லெட் குழந்தைகளுக்காகவே தயாரிக்கப்படுவதால் குழந்தைகள் மற்றும் பெற்றோர் மத்தியில் இந்த டேப்லெட்டுக்கு பெரிய வரவேற்பு இருக்கும் என்று நம்பப்படுகிறது.
அந்த விதத்தில் இப்போது குழந்தைகளுக்காக கூரியோ டேப்லெட் என்ற புதிய டேப்லெட் வருகிறது. இது குழந்தைகளைக் குறிவைத்து தயாரிக்கப்பட்டாலும் பெரியவர்களும் ரசிக்கும் படி இருக்கும்.
இந்த கூரியோ டேப்லெட்டின் முக்கிய அம்சங்கள் என்னவென்றால் இது ஆன்ட்ராய்டு ஐஸ் க்ரீம் சான்டிவிஜ் இயங்கு தளத்தைக் கொண்டிருக்கிறது. இதன் இன்டர்னல் சேமிப்பு 4ஜிபி ஆகும். அதுபோல் இதன் எக்ஸ்டர்னல் சேமிப்பை 32ஜிபி வரை விரிவுபடுத்த முடியும். கேமராவைப் பொருத்தவரை இந்த டேப்லெட் 2 மெகா பிக்சல் முக்கிய கேமராவையும் 0.3 மெகா பிக்சல் முகப்புக் கேமராவையும் கொண்டுள்ளது. அடுத்ததாக இந்த டேப்லெட்டில் யுஎஸ்பி ஸ்லாட்டும் உண்டு.
இந்த கூரியோ டேப்லெட் 7 இன்ச், 8 இனச் மற்றும் 10 இன்ச் என 3 மாடல்களில் வருகிறது. இது ஆன்ட்ராய்டு ஐஸ் க்ரீம் சான்ட்விஜ் இயங்கு தளம் கொண்டிருப்பதால் இந்த டேப்லெட்டை இயக்குவதற்கு சூப்பராக இருக்கும். மேலும் ஆன்ட்ராய்டு அப்ளிகேசன்களைப் பதிவிறக்கம் செய்யவும் முடியும்.
குறிப்பாக இந்த டேப்லெட் 4 முதல் 15 வயதில் இருக்கும் குழந்தைகளுக்காகவே தயாரிக்கப்படுகிறது. இதில் ஒரு சிறப்பு என்னவென்றால் பெற்றோருக்கென்று தனியாக ஒரு அப்ளிகேசனும் இருக்கின்றது. அதன் மூலம் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை தேவையில்லாத இணையதளங்களுக்குள் செல்லாமல் தடுக்க முடியும்.
மற்ற அம்சங்களைப் பார்த்தால் இந்த கூரியோ டேப்லெட் எச்டிஎம்ஐ கனக்டர் மற்றும் யுஎஸ்பி சாக்கெட் கொண்டிருப்பதால் இதில் தகவல் பரிமாற்றம் செய்வது மிக எளிதாக இருக்கும். யுஎஸ்பி சாக்கெட் மூலம் கேமரா மற்றும் ஜாய்ஸ்டிக்கை இணைக்க முடியும். அதுபோல் இதன் பேட்டரி 6 மணி நேர இயங்கு நேரத்தை வழங்குகிறது. இதன் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை.
இந்த கூரியோ ட்ப்லெட் குழந்தைகளுக்காகவே தயாரிக்கப்படுவதால் குழந்தைகள் மற்றும் பெற்றோர் மத்தியில் இந்த டேப்லெட்டுக்கு பெரிய வரவேற்பு இருக்கும் என்று நம்பப்படுகிறது.
பிரிவு:
ஆன்ட்ராய்டு,
கூரியோ டேப்லெட்,
டேப்லெட்
சேலம் மாவட்டத்தின் வரலாறு
தமிழகத்தின் 5வது பெரிய நகரான சேலம் தமிழகத்தின் வட மத்திய பகுதியில் அமைந்துள்ளது. கொங்கு மண்டலத்தின் கிழக்கு எல்லையில் அமைந்துள்ள சேலம் ஒரு வணிக மையம் ஆகும். சேலம் மாம்பழத்திற்கு பெயர் பெற்ற இடம். இதனால் இதனை 'மாங்கனி நகரம்' என்றும் அழைப்பார்கள். மலைகள் சூழ்ந்த மாநகர். மாம்பழமும், பச்சரிசியும் இந்த நகரின் பெயரைச் சொன்னவுடனேயே நம் நினைவுக்கு வந்து, நாவை நனைக்கும். பாக்சைடு கனிமம், லாரிகட்டுமானம், இரும்புத் தொழிற்சாலை என பல சிறப்புகளைக் கொண்ட நகரம். மலை சூழ்ந்த நாடு என்பதைக் குறிக்கும் சேலா, ஷல்யா
என்ற சொற்களில் இருந்து தான், சேலம் என்ற பெயர் உருவானது.
வடக்கே நாகர் மலை, தெற்கே ஜீரக மலை, மேற்கே காஞ்சன மலை, கிழக்கே கொடுமலை என நாற்புறமும் மலை சூழ்ந்த எழில் நகரம். ஏற்காடு, சேர்வராயன் மலை, மேட்டுர் அணை, சங்ககிரிக் கோட்டை என சுற்றிப் பார்க்க வேண்டிய இடங்கள் ஏராளம். சேலம் என்ற சொல் 'சைலம்' மற்றும் 'ஷைல்ய' என்னும் சொல்லில் இருந்து பிறந்ததாக கூறப்படுகிறது. 'சேலம்' என்றால் 'மலைகள் சூழ்ந்த இடம்' என்று பொருள். இவ்வூரில் உள்ள மலையைச் சேரன் ஆண்டதால் சேர்வராயன் மலை ஆயிற்று; அது போலச் 'சேரலம்' என்பது 'சேலம்' ஆயிற்று என்றும் கூறுவர். ஏத்தாப்பூர் செப்பேடு இவ்வூரைச் 'சாலிய சேரமண்டலம்' எனக் குறிப்பிடுகிறது. எனவே, சேரலம் என்னும் பெயரே காலப்போக்கில் திரிந்து சேலம் என வழங்கப்பட்டது.
சேலம் மற்றும் கோவைப் பகுதிகள் நீண்ட காலம் மதுரை நாயக்கர்களின் கட்டுப்பாடில் இருந்தது. பிற்பாடு 1768 இல் மதுரை-மைசூர் போரில் சேலம் ஹைதர் அலி கட்டுப்பாட்டுக்கு சென்றது. பின்பு 1799 இல் லார்டு க்லைவ் கைப்பற்றி சங்ககிரி துர்கத்தை தலைமை இடமாக கொண்டு வெள்ளையர்கள் அரசாங்கம் சார்பில் நிர்வாகம் நடந்தது. ஆங்கிலேயர்களின் இராணுவ படைத்தளமாக சேலம் விளங்கிற்று. அவர்கள் கட்டிய கோட்டை இங்குள்ளது, கோட்டைப்பகுதி தற்போது நகரின் மைய பகுதியாக உள்ளது.
என்ற சொற்களில் இருந்து தான், சேலம் என்ற பெயர் உருவானது.
வடக்கே நாகர் மலை, தெற்கே ஜீரக மலை, மேற்கே காஞ்சன மலை, கிழக்கே கொடுமலை என நாற்புறமும் மலை சூழ்ந்த எழில் நகரம். ஏற்காடு, சேர்வராயன் மலை, மேட்டுர் அணை, சங்ககிரிக் கோட்டை என சுற்றிப் பார்க்க வேண்டிய இடங்கள் ஏராளம். சேலம் என்ற சொல் 'சைலம்' மற்றும் 'ஷைல்ய' என்னும் சொல்லில் இருந்து பிறந்ததாக கூறப்படுகிறது. 'சேலம்' என்றால் 'மலைகள் சூழ்ந்த இடம்' என்று பொருள். இவ்வூரில் உள்ள மலையைச் சேரன் ஆண்டதால் சேர்வராயன் மலை ஆயிற்று; அது போலச் 'சேரலம்' என்பது 'சேலம்' ஆயிற்று என்றும் கூறுவர். ஏத்தாப்பூர் செப்பேடு இவ்வூரைச் 'சாலிய சேரமண்டலம்' எனக் குறிப்பிடுகிறது. எனவே, சேரலம் என்னும் பெயரே காலப்போக்கில் திரிந்து சேலம் என வழங்கப்பட்டது.
சேலம் மற்றும் கோவைப் பகுதிகள் நீண்ட காலம் மதுரை நாயக்கர்களின் கட்டுப்பாடில் இருந்தது. பிற்பாடு 1768 இல் மதுரை-மைசூர் போரில் சேலம் ஹைதர் அலி கட்டுப்பாட்டுக்கு சென்றது. பின்பு 1799 இல் லார்டு க்லைவ் கைப்பற்றி சங்ககிரி துர்கத்தை தலைமை இடமாக கொண்டு வெள்ளையர்கள் அரசாங்கம் சார்பில் நிர்வாகம் நடந்தது. ஆங்கிலேயர்களின் இராணுவ படைத்தளமாக சேலம் விளங்கிற்று. அவர்கள் கட்டிய கோட்டை இங்குள்ளது, கோட்டைப்பகுதி தற்போது நகரின் மைய பகுதியாக உள்ளது.
பிரிவு:
சேலம்,
சேலம் வரலாறு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)