வணக்கம்

எனது வலைப்பதிவிற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறேன். எனது வலைப்பதிவு பற்றிய தங்களின் கருத்துக்களை vsathishkumarmca(at)gmail(dot)com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
நன்றி

சனி, 19 மார்ச், 2011

முதன் முறையாக புதன் கிரகத்திற்கு நாசா விண்கலம்

அமெரிக்காவின் நாசா விண்வெளி மையத்தின் விண்கலம் சூரியனுக்கு அருகாமையில் உள்ள புதன் கிரக வளையத்திற்கு வந்தது.
இந்த கிரகத்தை சுற்றும் உலக நாடுகளின் முதல் விண்கலம் என்ற பெருமை நாசா விண்கலத்திற்கு கிடைத்துள்ளது. மெசஞ்சர் என்ற இந்த விண்கலம் அமெரிக்க உள்நாட்டு நேரப்படி இரவு 9 மணிக்கு புதன் கிரக வளையத்திற்கு வந்தது. மெசஞ்சர் விண்கலம் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்னர் தனது பயணத்தை துவக்கியது.
மெசஞ்சரின் சாதனை குறித்து நாசா கூறுகையில்,"சூரியக் குடும்பத்தில் உள்பகுதியில் உள்ள புதன் கிரகத்திற்கு தங்களது விண்கலம் நுழைந்துள்ளது. இது பொறியியல் மற்றும் அறிவியல் சாதனை நிகழ்வாகும்.
அடுத்த சில வாரங்களுக்கு கடுமையாக வெப்பம் கொண்ட புதன் கிரக சூழலை விண்கலம் எதிர்கொள்ளும் வகையில் ஆய்வாளர்கள் கவனம் செலுத்துவார்கள். மார்ச் 23 ம் திகதி விண்கல கருவிகள் சோதனை செய்யப்பட்டு முடுக்கி விடப்படுகிறது. ஏப்ரல் 4 ம் திகதியன்று மெசஞ்சர் விண்கலம் தனது பயணத்தின் அறிவியல் நிலையை துவக்கும்.
மெசஞ்சர் விண்கலம் சூரியனில் இருந்து 280 லட்சம் மைல் தொலைவிலும், பூமியல் இருந்து 960 லட்சம் மைல் தொலைவிலும் உள்ளது. இந்த விண்கலம் புதன் கிரகத்தை ஆய்வு செய்ய 7 அறிவியல் உபகரணங்களை கொண்டுள்ளது.
மெசஞ்சர் விண்கலம் 2004 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தனது பயணத்தை துவக்கி 490 கோடி மைல் தூரத்தை கடந்துள்ளது. பல்வேறு கடுமையான சூழல்களை எதிர் கொண்டு புதன் கிரக வளையத்திற்குள் இந்த விண்கலம் நுழைந்துள்ளது என நாசா அறிவித்தது.

ஐ போனை மிஞ்சிய ஆண்ட்ராய்ட்!

விரைவான செயல்பாடு மற்றும் இன்டர்நெட் பக்கங்களை அதி வேகமாக லோட் செய்வதில் ஆப்பிளின் ஐபோன் 4-ஐ மிஞ்சிவிட்டது கூகுளின் ஆண்ட்ராய்ட் நெக்சஸ் ஸ்மார்ட்போன் என அறிவித்துள்ளது பிரபல சாப்ட்வேர் நிறுவனம். செல்போன் உலகில் மிக உயர்ந்த அந்தஸ்தை அனுபவித்து வருகிறது ஆப்பிளின் ஐ போன் 4 மாடல். ஆனால் இந்த செல்போனை விட சிறந்ததாக கூகுளின் ஆன்ட்ராய்ட் நெக்சஸ் ஸ்மார்ட்போன் வந்துவிட்டது. இதுகுறித்து கனடாவின் பிரபல சாப்ட்வேர் நிறுவனமான பிளேஸ் சாப்ட் மேற்கொண்ட ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதில் ஐபோனை விட, ஆன்ட்ராய்ட் போன் இன்டர்நெட் செயல்பாட்டில் அதிக வேகம் கொண்டதாக தெரிய வந்துள்ளது. ஐபோனை விட ஆன்ட்ராய்ட் போன் 84 சதவீதம் அதிக வேகமாக இன்டர்நெட் பக்கங்களைத் திறப்பதாக ப்ளேஸ் தெரிவித்துள்ளது. வயர்லெஸ் நெட்வொர்க்கில் ஆப்பிள் போனை விட ஆன்ட்ராய்ட் போன் 52 சதவீதம் அதிக வேகத்தில் இயங்குவதாகவும் தெரிய வந்துள்ளது. வேகமான இன்டர்நெட் செயல்பாடு குறித்து ஆப்பிள் கவலைப்படவில்லை. ஆனால் கூகுள் அந்த விஷயத்தில் மிகுந்த கவனம் செலுத்துகிறது என மேலும் இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

மர்ம நகரமான அட்லாண்டிஸ் கடலுக்கு அடியில் கண்டுபிடிப்ப

பல்லாயிரம் நூற்றாண்டுகளுக்கு முன்னர் கடலுக்கு அடியில் மூழ்கிப்போனதாய் நம்பப்படும் மர்ம நகரான அட்லாண்டிஸின் எச்சங்களை கண்டுபிடித்துள்ளதாக அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர்.இவர்கள் இந்நகரின் எச்சங்களை தென் ஸ்பானியவில் கண்டுபிடித்துள்ளதாகக் குறிப்பிடுகின்றனர். அக்காலத்தில் ஏற்பட்ட சுனாமியில் இது அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் எனவும் அது ஸ்பானிய காடிஸ் நகரிற்கு வடக்கே கடலடியில் மூழ்கிப்போயுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
செய்மதி புகைப்படங்களின் உதவியுடனேயே ஆய்வாளர்கள் இதனை கண்டுபிடித்துள்ளனர். மேலும் இதன் போது ஆழ் நில செய்மதிகள், டிஜிட்டல் மெப்பிங் முறைகள், நீருக்கு அடியில் உபயோகப்படுத்தப்படும் தொழிநுட்பங்கள் என்பவற்றையும் தாம் பயன்படுத்தியதாக இவ்வாராய்ச்சியை மேற்கொண்ட ஹார்ட்போர்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ரிச்சார்ட் ப்ரிஹண்ட் கிராக் தெரிவித்துள்ளார்.
கிரேக்க தத்துவ அறிஞரான பிளேட்டோ(கி.மு 428/427-348/347) தமது "திமேயஸ்" மற்றும் "கிரேட்டஸ்" எனும் உரையாடல்களில் அட்லாண்டிக் பெருங்கடலில் இருந்த லிபியா மற்றும் துருக்கியின் பெரும்பகுதியும் இணைந்த நிலப்பரப்பைக் காட்டிலும் அதிகமான நிலப்பரப்பினைக் கொண்ட தீவாக அட்லாண்டிஸைக் குறிப்பிடுகிறார்.
அத்தீவில் நாகரிகத்தில் முதிர்ச்சியடைந்த ஒரு சமுதாயம் வாழ்ந்ததாகவும் அவர்கள் பல தேசங்களைத் தம் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்ததாகவும், பின்னர் அதீத செல்வச் செழிப்பாலும் அதிகாரத்தாலும் அச்சமுதாயம் சீரழிந்ததாகவும், அதனைத் தொடர்ந்து பெரும் நிலநடுக்கங்களாலும் எரிமலைச் சீற்றத்தாலும் அத்தீவு அழிந்ததாகவும் பிளேட்டோ கூறுகிறார்.
அட்லாண்டிஸ் குறித்த இத்தகவல்களை கிரேக்கச் சட்டங்களை உருவாக்கிய ஸோலான் என்பவரிடம் எகிப்திய ஞானிகள் கூறுவதாக பிளேட்டோ கூறுகிறார். இக்குறிப்புகள் பிளேட்டோவின் காலத்தில் வாழ்ந்த அரிஸ்டாட்டிலால்(கி.மு.384-322) கற்பனையானவை எனக் கூறப்பட்டாலும், பிளேட்டோவிற்கு பின்னர் இன்று வரையிலும் அட்லாண்டிஸைத் தேடுவோர் உள்ளனர்.

மேலும் பலர் இதனைப் பற்றி குறிப்பிட்டுள்ளனர். ஆரம்பத்தில் இந்நகரானது கிரேக்க தீவான சென்டோரினி, இத்தாலிய தீவுகளான சார்டினியா மற்றும் சைப்பிரஸில் இருக்கலாம் என பலரால் வெவ்வேறு விதமாக தெரிவிக்கப்பட்டு வந்தது.
தற்போது அந்நகரின் வாயில் இருந்ததாக கருதப்படும் பாரிய தூண் ஒன்றையும் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். மேலும் பல ஆதாரங்களையும் அவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.