வணக்கம்

எனது வலைப்பதிவிற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறேன். எனது வலைப்பதிவு பற்றிய தங்களின் கருத்துக்களை vsathishkumarmca(at)gmail(dot)com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
நன்றி

வியாழன், 28 ஏப்ரல், 2011

தமிழ்ப் புத்தகத் தகவல் திரட்டு

பழந்தமிழ் நூல்கள் முதல் தற்போதைய நூல்கள் வரை பல நூல்களை மின்னூல்களாக்கி அவற்றை அழிவிலிருந்து பாதகாத்து வரும் பாராட்டுக்குரிய இணையத்தின் இணைப்புகள்.

தமிழ்ப் புத்தகத் தகவல் திரட்டு
புத்தகங்களை தரவிறக்க...

செவ்வாய், 26 ஏப்ரல், 2011

ஜப்பானில் இறந்தவர்களை தேடும் முயற்சியில் ஈடுபடும் ரோபோ

ஜப்பானில் கடந்த மாதம் ஏற்பட்ட நிலநடுக்கமும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட சுனாமி பேரலையிலும் சிக்கி உயிரிழந்தோரை கடலில் தேடும் பணியில் 2 ரோபோக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
கடந்த 5 நாள்களாக மேற்கொள்ளப்பட்ட பணியில் இதுவரை எவரது சடலமும் கிடைக்கவில்லை என ஜப்பான் அரசு செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். கடலுக்கடியில் தேடும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள இந்த ரோபோக்களில் கமெராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அத்துடன் சோனார் கருவியும் உள்ளது. இரண்டு ரோபோக்களில் ஒன்று ஜப்பானிலும், மற்றொன்று அமெரிக்காவிலும் தயாரிக்கப்பட்டதாகும். இப்பகுதியில் கடலில் சீற்றம் அதிகமாக இருப்பதால் தேடும் பணியில் ஈடுபடுவது சிரமம் என நீச்சல் வீரர்கள் தெரிவித்ததால் ரோபோக்கள் ஈடுபடுத்தப்பட்டன. கடலில் மூழ்கிய காரைக் கண்டுபிடித்த ரோபோக்கள் அதில் உயிரிழந்தோர் எவரேனும் உள்ளனரா என்றும் தேடியது. ரோபோக்கள் எடுத்த படப்பதிவுகள் செய்தியாளர்களுக்கு காட்டப்பட்டன. கடலில் கலந்துள்ள கதிர்வீச்சின் அளவை அறிய மற்றொரு ரோபோ பயன்படுத்தப்பட உள்ளது.

ஓசோன் ஓட்டையால் ஏற்படும் பருவநிலை மாற்றங்கள்

பருவ நிலை மாற்றங்களுக்கு ஓசோனில் விழும் ஓட்டைகள் முக்கியக் காரணங்களாக உள்ளன. இந்த ஓசோன் துளைகள் பூமியின் தென் துருவப் பகுதியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்த ஆய்வு அறிக்கை அறிவியல் பத்திரிக்கையின் 21வது இதழில் வெளியிடப்பட்டுள்ளது. கொலம்பியா பல்கலைகழகத்தின் ஸ்கூல் ஆப் இன்சினியரிங் ஆய்வாளர்கள் ஓசோன் ஓட்டையால் துருவப் பகுதி பாதிப்பை விளக்கி உள்ளனர். பூமிப்பகுதியானது வடதுருவம், தென்துருவம் என ஒரு கற்பனைக் கோடு மூலம் பிரிக்கப்படுகிறது. இதில் ஓசோன் படல ஓட்டையால் தென் துருவ அரை வட்டப் பகுதி முழுவதும் தாக்குதலுக்கு உள்ளாகி இருப்பது தெரியவந்துள்ளது. கடந்த 50 ஆண்டுகளில் இந்தப் பாதிப்பால் மாற்றம் ஏற்பட்டுள்ளது. சூரியனில் இருந்து தீங்கு விளைவிக்கும் புற ஊதாக்கதிர்களை ஓசோன் படலம் உறிஞ்சுகிறது. இதனால் பூமியில் உள்ள உயிர்களுக்கு அபாயம் ஏற்படாத நிலை இருந்தது. கடந்த அரை நூற்றாண்டாக மனிதர்களால் உற்பத்தி ஆன அதி நவீன பொருட்களால் ஓசோன் மண்டலம் பாதிக்கப்படுகிறது. 1989ம் ஆண்டு மாண்ட்ரீல் ஒப்பந்தப்படி குளோரோ ப்ளோரசண்ட் பொருட்கள் பயன்பாட்டில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டுள்ளன. மாண்ட்ரீல் ஒப்பந்தத்தில் தற்போது வரை 196 நாடுகள் கையெழுத்திட்டு உள்ளன. இனிவரும் காலங்களில் சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத நேரத்தில் ஓசோன் படலம் சீராகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சூரிய சக்தியில் இயங்கக்கூடிய "சோலார் விமானம்"

முழுக்க முழுக்க சூரிய ஒளியிலேயே இயங்கும் விமானம் சுவிட்சர்லாந்தில் வெற்றிகரமாக சோதித்து பார்க்கப்பட்டது. சூரிய ஒளியில் இயங்கும் வாகனங்கள், விளக்குகள், சூடேற்றிகள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. சூரிய விமானம் உருவாக்குவதற்கான ஆராய்ச்சி கடந்த 2003ம் ஆண்டில் இருந்தே நடந்து வருகிறது. சுவிட்சர்லாந்தின் லாசான் நகரை சேர்ந்த இகோல் தொழில்நுட்ப கல்வி நிறுவனம் முழுக்க முழுக்க சூரிய சக்தியிலேயே இயங்கும் விமானத்தை உருவாக்கியுள்ளது. அதிக அளவு கனம் இருக்கக் கூடாது என்பதால் கார்பன் பைபர் பொருளால் விமானம் உருவாக்கப்பட்டது. ஒருவர் மட்டுமே செல்லக்கூடிய விமானத்தின் மொத்த எடை 1,600 கிலோ. சூரிய ஒளியில் இருந்து மின்சார சக்தி தயாரிப்பதற்காக 11,600 சூரிய மின்கலங்கள் பயன்படுத்தப்பட்டன. சூரிய ஒளியின் மூலம் லித்தியம் மின்கலங்கள் சார்ஜ் ஏற்றப்பட்டு அதன் மூலம் இன்ஜின் இயக்கப்பட்டது. 10 குதிரைத் திறனுள்ள 4 இன்ஜின்கள் பயன்படுத்தப்பட்டன. சுவிட்சர்லாந்தின் லாசான் நகருக்கு அருகில் உள்ள பேயர்ன் ராணுவ தளத்தில் இதன் சோதனை நடந்தது. 64 கி.மீ வேகத்தில் புறப்பட்ட விமானம் சராசரியாக 70 கி.மீ வேகத்தில் பறந்தது. சீராக பறந்த விமானம் 2 மணி நேர பயணத்துக்கு பிறகு பத்திரமாக தரையிறங்கியது. இதுபற்றி இகோல் தொழில்நுட்ப கல்வி நிறுவன விஞ்ஞானிகள் கூறுகையில்,"பற்றரிகளின் திறன், சோலார் விமானத்தின் திறனை அதிகரிக்க தொடர்ந்து ஆய்வுகள் நடந்து வருகின்றன. உலகையே சுற்றி வரும் சோலார் விமானம் 2014ல் அறிமுகப்படுத்தப்படும்" என்றனர்.

2900 ஆண்டுகளுக்கு முன்பே நடைபெற்ற மூளை அறுவை சிகிச்சை

திபெத்தில் 1998ம் ஆண்டு ஒரு வித்தியாசமான மண்டை ஓடு கிடைத்துள்ளதாகவும், அதை சோதனை செய்ததில் அந்த மண்டை ஓட்டை பிளந்து அறுவை சிகிச்சை செய்ததற்கான அடையாளங்கள் இருந்துள்ளதாகவும் தெரிகிறது. மண்டை ஓட்டை பிளந்து அறுவை சிகிச்சை செய்வது என்பது சமீபத்தில் தான் கண்டுபிடிக்கப்பட்ட மருத்துவ முறையாக கருதப்படுகிறது. ஆனால் அந்த மண்டை ஓட்டை ஆராய்ந்த போது அது ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முந்தையது என்று தெரியவந்தது. அதாவது அந்த காலத்திலேயே அறுவை சிகிச்சை நடந்துள்ளது. இப்போது திபெத்தில் 2900 ஆண்டுகளுக்கு முன்பே மூளை அறுவை சிகிச்சை நடந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்து உள்ளன. பழங்கால புத்தகம் ஒன்றை ஆய்வு செய்த போது இந்த தகவல் கிடைத்து உள்ளது.திபெத்தில் உள்ள லசா பல்கலைக்கழக பேராசிரியர் கர்மா டிரின்லி இந்த தகவலை கண்டறிந்து உள்ளார். அப்போது மூளை அறுவை சிகிச்சை நடந்ததை இந்தியாவில் இருந்து தசோக்யெல் என்ற மருத்துவர் பார்வையிட வந்திருந்ததாகவும் அதில் குறிப்புகள் உள்ளன.