புற்றுநோய் மற்றும் இதய நோயில் இருந்து பாதுகாப்பு அளித்து, வாழ் நாளை அதிகரிக்கும் கருஞ் சிவப்பு தக்காளியை விஞ் ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர். தாவரங்கள், அவற்றில் உள்ள ரசாயனங்கள், நோய் எதிர்ப்பு குணங்கள் குறித்து ஆராய, புளோரா என்ற அமைப்பு துவக்கப்பட்டுள்ளது.
இந்த புளோரா திட்டத்தின் கீழ், ஐரோப்பிய மையங்கள் மற்றும் பிரிட்டனர், நார் விச்சில் உள்ள ஜான் இன் னஸ் மையம் இணைந்து, கருஞ்சிவப்பு தக்காளியை உருவாக்கி உள்ளனர். தோட்டத்தில் வளர்க்கப்படும் செடியின் இரண்டு வகை ஜீன்களை பிரித்தெடுத்து, கருஞ்சிவப்பு தக் காளி உருவாக்கப்பட்டுள்ளது.
“பி53′ என்ற ஜீனில் குறைபாடுகள் இருந்தால், புற்று நோய் மற்றும் இதய நோய் ஏற்படும். இந்த குறைபாடு உள்ள எலிகளிடம் பரிசோதித்ததில், கருஞ்சிவப்பு தக்காளி புற்று நோய் மற்றும் இதய நோய்களை எதிர்க்கிறது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த குறைபாடுகள் உள்ள எலிகள் மூன்று விதமாக பிரிக்கப்பட்டன. ஒரு பிரிவு எலிகளுக்கு சாதாரண உணவு அளிக்கப்பட்டது. இன்னொரு பிரிவு எலிகளுக்கு 10 சதவீதம் சிவப்பு நிற தக்காளி பவுடர் உணவாக அளிக்கப்பட்டது. மூன்றாவது பிரிவு எலிகளுக்கு 10 சதவீதம் கருஞ்சிவப்பு தக்காளி பவுடர் அளிக்கப்பட்டது.
சாதாரண மற்றும் சிவப்பு தக்காளி உணவு உட்கொண்டு வந்த எலிகளின் வாழ்நாள் 142 நாட் களில் முடிந்தது. ஆனால், கருஞ்சிவப்பு தக்காளியை உணவாக சாப்பிட்டு வந்த எலிகளின் வாழ்நாள் 182 நாட்களாக நீடித்தது. புற்று நோய் மற்றும் இதய நோய் தாக்கினாலும், கருஞ்சிவப்பு நிற தக் காளிகள் வாழ்நாளை அதிகரிக்கும் என்பது இதன் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், எந்த விதமான காரணிகள், புற்று நோய் அல்லது இதய நோயை தடுக்கின்றன என்பது துல்லியமாக கண்டறியப் படவில்லை. கருஞ்சிவப்பு தக்காளியின் மருத்துவ, ரசாயன குணம் குறித்த அடுத்த கட்ட சோதனைக்கு விஞ் ஞானிகள் தயாராகி வருகின்றனர். மனிதர்களிடம் இதை பரிசோதிக்க நீண்ட காலம் பிடிக்கும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
வியாழன், 28 அக்டோபர், 2010
புற்று நோய், இதய நோய் தடுக்கும் கருஞ்சிவப்பு தக்காளி
பிரிவு:
மருத்துவ குறிப்புகள்
'இன்னொரு பூமி' இருக்குமா?
இன்றுவரை 230 அயல்கிரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டு உறுதி செய்யப்பட்டிருக்கின்றன. இதில் ஜெப்ரி மார்சி என்பவர் தலைமையிலான அமெரிக்க ஆராய்ச்சிக் குழு மட்டும் 150 கிரகங்களைக் கண்டுபிடித்திருக்கிறது. நமது பால்வீதியில் மட்டும் 10 ஆயிரம் கோடி கிரகங்கள் இருக்கலாம் என்று ஜெப்ரி மார்சி தெரிவித்திருக்கிறார். இதில் வியாழன் போன்ற வாயுக்கோள கிரகங்கள் 600 கோடி இருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. பூமியைப் போன்று 10 லட்சம் கிரகங்கள் இருக்கலாம் என்று டெப்ராபிசர் என்ற ஆராய்ச்சியாளர் கூறுகிறார். தற்போது 5 கிரகங்களில் பூமியைப் போன்று தண்ணீர் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 50 கிரகங்களில் உயிரினம் இருக்க வாய்ப்பிருப்பதாகவும் விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். மெக்சிகோ அருகே விழுந்த ஒரு விண்கல்லில் சர்க்கரைப் படிவு காணப்பட்டிருப்பதால், உயிரினம் உள்ள அயல்கிரகம் இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
அயல்கிரகங்களில் மனிதர்களைப் போன்ற அறிவுமிக்க உயிரினங்கள் இருக்கின்றனவா? என்று கண்டுபிடிப்பதற்கான திட்டத்தை அமெரிக்கா செயல்படுத்தி வருகிறது. நமது பூமியின் கடலின் அடியில் உள்ள எரிமலைகளிலும், வடதுருவப் பனிப் பிரதேசத்திலும், வறண்ட பாலைவனங்களிலும் ண்ணுயிரிகள் இருப்பதைப் போல, விண்வெளியில் உள்ள அயல்கிரகங்களிலும் உயிரினங்கள் ஏற்கனவே தோன்றி வாழ்ந்து கொண்டிருப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக டெப்ராபிசர் தெரிவித்துள்ளார். பூமிக்கு அருகில் உள்ள அயல்கிரகங்களில் உயிரினங்கள் இருந்தால், அதை 10 வருடங்களுக்குள் கண்டுபிடித்துவிடலாம் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.
பூமியில் இருந்து 44 ஒளிவருட தூரத்தில் உள்ள `உர்சா மேஜர்’ என்ற நட்சத்திரத்தை ஒரு கிரகமானது, சூரியனை பூமி சுற்றிவரும் தூரத்தில் சுற்றிக் கொண்டிருக்கிறது. அக்கிரகத்தில் தண்ணீரும், உயிரினங்களும் காணப்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். இரவில் நான் கோடிக்கணக்கான நட்சத்திரங்களைப் பார்க்கும்போது அவற்றில் உயிரினங்கள் இருப்பதற்கு வாய்ப்பிருக்கிறது என்றே எனக்குத் தோன்றுகிறது’ என்கிறார், டெப்ரா பிசர்.
அயல்கிரகங்களில் மனிதர்களைப் போன்ற அறிவுமிக்க உயிரினங்கள் இருக்கின்றனவா? என்று கண்டுபிடிப்பதற்கான திட்டத்தை அமெரிக்கா செயல்படுத்தி வருகிறது. நமது பூமியின் கடலின் அடியில் உள்ள எரிமலைகளிலும், வடதுருவப் பனிப் பிரதேசத்திலும், வறண்ட பாலைவனங்களிலும் ண்ணுயிரிகள் இருப்பதைப் போல, விண்வெளியில் உள்ள அயல்கிரகங்களிலும் உயிரினங்கள் ஏற்கனவே தோன்றி வாழ்ந்து கொண்டிருப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக டெப்ராபிசர் தெரிவித்துள்ளார். பூமிக்கு அருகில் உள்ள அயல்கிரகங்களில் உயிரினங்கள் இருந்தால், அதை 10 வருடங்களுக்குள் கண்டுபிடித்துவிடலாம் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.
பூமியில் இருந்து 44 ஒளிவருட தூரத்தில் உள்ள `உர்சா மேஜர்’ என்ற நட்சத்திரத்தை ஒரு கிரகமானது, சூரியனை பூமி சுற்றிவரும் தூரத்தில் சுற்றிக் கொண்டிருக்கிறது. அக்கிரகத்தில் தண்ணீரும், உயிரினங்களும் காணப்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். இரவில் நான் கோடிக்கணக்கான நட்சத்திரங்களைப் பார்க்கும்போது அவற்றில் உயிரினங்கள் இருப்பதற்கு வாய்ப்பிருக்கிறது என்றே எனக்குத் தோன்றுகிறது’ என்கிறார், டெப்ரா பிசர்.
பிரிவு:
வரலாற்றுச் சிறப்புகள்
ஏலக்காயின் மருத்துவ குணங்கள்
ஏலக்காய் என்பது இஞ்சி செடி வகையைச் சேர்ந்தது. பச்சை நிறக் காய்களைக் கொண்டது. ஏலக்காய் பச்சை நிறத்திலும், அடர் பழுப்பு நிறத்திலும் இருக்கும். ஏலக்காய் நறுமணப் பொருளாக மட்டும் இல்லாமல், பல மருத்துவக் குணங்களைக் கொண்டதாகும். மன இறுக்கத்தைக் குறைத்து உடல் புத்துணர்ச்சி பெற ஏலக்காய் பயன்படுகிறது. பல் மற்றும் வாய் தொடர்பான பல பிரச்சினைகளுக்கு ஏலக்காய் நல்ல தீர்வாக அமையும். செரிமானத்திற்கு உதவும். இதனால்தான் நெய் சேர்த்து செய்யப்படும் இனிப்புகளில் அவசியமாக ஏலக்காயை சேர்ப்பார்கள். குரல் வளை மற்றும் தோல் தொடர்பான நோய்களைத் தீர்க்கும் ஆற்றல் ஏலக்காய்க்கு உண்டு. மலட்டுத் தன்மையைப் போக்குவதற்கும் ஏலக்காய் பயன்படுத்தப்படுகிறது.
பிரிவு:
மருத்துவ குறிப்புகள்
சோழர் காலத்து தமிழ் எழுத்துக்கள் திருமலையில் கண்டெடுப்பு
திருமலை மாவட்டத்தில் சோழர் காலத்து தமிழ் எழுத்துக்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. திருமலை மாவட்டத்தில் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது தொன்மையான தமிழ் எழுத்துக்கள் கொண்ட கல்வெட்டுக்கள் நிலத்துக்கடியில் இருந்து மீட்கப்பட்டுள்ளன. பாடல் பெற்ற தலமான திருக்கோணஸ்வரம் கோவிலுக்கு அண்மையாக செல்லும் கோணேஸ்வரம் வீதிக்கு அண்மையாக இந்த கல்வெட்டுக்கள் மண்ணில் புதைந்து கிடக்கிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பிரிவு:
வரலாற்றுச் சிறப்புகள்
இரட்டை சூரியன் உள்ள கிரகங்கள் கண்டுபிடிப்பு
டாட்டூயின்’ என்பது அந்த உலகம். அங்கு 2 சூரியன்கள். இரண்டும் அவ்வப்போது வந்துபோகும். இது கதையில்லை. உண்மைதான் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.பிரபஞ்சத்தில் ‘லைரா’ என்ற பகுதி பற்றி அமெரிக்காவின் டென்னசி பல்கலைக்கழகத்தை சேர்ந்த வானியல் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு நடத்தினர்.
அப்பகுதியில் நட்சத்திரங்கள் மற்றும் கோள்களில் ஏற்படும் மாற்றங்களை அதிநவீன தொலைநோக்கிகள் மூலம் தொடர்ச்சியாக கண்காணித்தனர். அப்பகுதியில் சுமார் 12 கிரகங்களுக்கு இரண்டிரண்டு சூரியன்கள் இருப்பது தெரியவந்துள்ளது.பூமியில் இருந்து இது சுமார் 49 ஒளிஆண்டு (49 லட்சம் கோடி கி.மீ.) தூரத்தில் இருக்கிறதாம். இப்போது புறப்பட்டு ஒளியின் வேகத்தில் ராக்கெட்டில் போனால்கூட 49 ஆண்டு கழித்துதான் அங்கு சென்றடைய முடியும்.. அவ்வளவு தொலைவு.இதுதொடர்பாக தீவிரமாக ஆய்வு செய்து வருகிறோம். பூமி போல, உயிரினங்கள் வாழத் தகுந்த கிரகங்கள் அங்கு ஏதேனும் இருக்கிறதா என்று விரைவில் தெரிவரும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.
அப்பகுதியில் நட்சத்திரங்கள் மற்றும் கோள்களில் ஏற்படும் மாற்றங்களை அதிநவீன தொலைநோக்கிகள் மூலம் தொடர்ச்சியாக கண்காணித்தனர். அப்பகுதியில் சுமார் 12 கிரகங்களுக்கு இரண்டிரண்டு சூரியன்கள் இருப்பது தெரியவந்துள்ளது.பூமியில் இருந்து இது சுமார் 49 ஒளிஆண்டு (49 லட்சம் கோடி கி.மீ.) தூரத்தில் இருக்கிறதாம். இப்போது புறப்பட்டு ஒளியின் வேகத்தில் ராக்கெட்டில் போனால்கூட 49 ஆண்டு கழித்துதான் அங்கு சென்றடைய முடியும்.. அவ்வளவு தொலைவு.இதுதொடர்பாக தீவிரமாக ஆய்வு செய்து வருகிறோம். பூமி போல, உயிரினங்கள் வாழத் தகுந்த கிரகங்கள் அங்கு ஏதேனும் இருக்கிறதா என்று விரைவில் தெரிவரும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.
பிரிவு:
வரலாற்றுச் சிறப்புகள்
பயனுள்ள தமிழ் இணையதளம்
தமிழ் கவிதைகள், கதைகள், பாடல் வரிகள், பாடல் ராகங்கள், உணவு செய்முறைகள், தமிழில் குழந்தை பெயர்கள் மற்றும் பலவகை தமிழ் பொழுதுபோக்கு அம்சங்களைக் கொண்ட இணையதளத்தை பார்வையிட சுட்டியை இங்கே சுட்டவும்
பிரிவு:
தமிழ் இணையம்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)