பாங்காக்: 10 கோடி ஆண்டு பழமையான முதலைகளின் எலும்புக் கூடுகள் தாய்லாந்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தாய்லாந்தின் மகாசரகம் பல்கலைக்கழக அகழ்வாராய்ச்சி நிபுணர்கள் குழு கோம்சான் லாப்ரசர்ட் தலைமையில் சமீபத்தில் அகழ்வாராய்ச்சி நடத்தினர். இதில் சுமார் 10 கோடி ஆண்டு பழமையான ஏராளமான முதலைகளின் எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இந்த முதலைகளுக்கும் தற்போதைய முதலைகளுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். முதலை படிமங்களின் பல் அமைப்பை கொண்டு முதல்கட்டமாக நடைபெற்ற ஆராய்ச்சியில் அவை மீன்களை மட்டுமே உணவாகக் கொண்டு வாழ்ந்திருக்க வேண்டும் என்று நம்பப்படுகிறது.
பழங்கால முதலைகள் தரையில் வாழ்ந்திருக்க வேண்டும். மிக விரைவாக ஓடும் திறன் பெற்றிருந்திருக்கலாம் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். இது பற்றி தொடர் ஆராய்ச்சி நடந்து வருகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக