கோவையில் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுடன் இணைந்து, தமிழ் இணைய மாநாடு ஜூன் 23 முதல் 27ம் தேதி வரை நடக்கப் போவது நாமறிந்ததே. இதையொட்டி, கொடிசியா வளாகத்தில் தமிழ் கணினி கண்காட்சி நடக்கிறது. இதற்காக 2 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது.
அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்காக குளிர்சாதன வசதியுடன் 123 சிறு அரங்குகள் அமைக்கப்படவுள்ளன. அரங்குகளில் மின் ஆளுமை மண்டலம், தமிழ் பன்னாட்டு நிறுவன மண்டலம், தமிழ் வன்பொருள் மண்டலம், தமிழ் மென் பொருள் மண்டலம், தமிழ் பல்லூடக மண்டலம், தமிழ் விக்கிப்பீடியா, வலைப்பூக்கள், கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் ஆகிய பிரிவுகளின் அடிப்படையில் அரங்குகள் அமைக்கப்பட உள்ளன.
வியாழன், 27 மே, 2010
செம்மொழி மாநாட்டில் தமிழ் கணினி கண்காட்சி
பிரிவு:
தமிழ் இணையம்,
தமிழ் கணினி
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக