வணக்கம்

எனது வலைப்பதிவிற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறேன். எனது வலைப்பதிவு பற்றிய தங்களின் கருத்துக்களை vsathishkumarmca(at)gmail(dot)com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
நன்றி

வியாழன், 27 மே, 2010

செம்மொழி மாநாட்டில் தமிழ் கணினி கண்காட்சி

கோவையில் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுடன் இணைந்து, தமிழ் இணைய மாநாடு ஜூன் 23 முதல் 27ம் தேதி வரை நடக்கப் போவது நாமறிந்ததே. இதையொட்டி, கொடிசியா வளாகத்தில் தமிழ் கணினி கண்காட்சி நடக்கிறது. இதற்காக 2 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது.
அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்காக குளிர்சாதன வசதியுடன் 123 சிறு அரங்குகள் அமைக்கப்படவுள்ளன. அரங்குகளில் மின் ஆளுமை மண்டலம், தமிழ் பன்னாட்டு நிறுவன மண்டலம், தமிழ் வன்பொருள் மண்டலம், தமிழ் மென் பொருள் மண்டலம், தமிழ் பல்லூடக மண்டலம், தமிழ் விக்கிப்பீடியா, வலைப்பூக்கள், கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் ஆகிய பிரிவுகளின் அடிப்படையில் அரங்குகள் அமைக்கப்பட உள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக