திங்கள், 10 மே, 2010
ஒன்பதாவது இணைய மாநாடு - 2010 கோவை
தமிழ்நாட்டில் கோவையில் வரும் சூன் 23 முதல் 27 வரை ஒன்பதாவது தமிழ் இணைய மாநாடு நடைபெற உள்ளது. இது கருத்தரங்கம், சமுதாய குழுமம், கண்காட்சி ஆகிய மூன்று சிறப்புக் கூறுகளைக் கொண்ட முழு அளவிலான தமிழ் இணைய மாநாடாக விளங்கும். தமிழ் கணிணியம், பொதுவான தமிழ் இணையம் ஆகியவற்றின் அண்மைக்கால முன்னேற்றங்கள்,சவால்கள் குறித்து அலசி ஆராயும் தொழில் நுட்பக் குழுவாக மாநாட்டு அரங்குகள் விளங்கும். உலக அளவிலான தமிழ் இணையத் தொழில் நுட்ப வல்லுனர்கள், ஆய்வறிஞர்கள் இம் மாநாட்டில் பங்கேற்க உள்ளனர். தமிழ் இணைய மாநாடு வரிசையில் இது ஒன்பதாவது மாநாடு ஆகும். கடந்த மாநாடுகள் கொலோன், செருமனி (2009), சிங்கப்பூர், (1997, 2000, 2004), சென்னை (1999, 2003), கோலாலம்பூர், மலேசியா (2001), சான் பிரான்சிசுகோ, அமெரிக்கா (2002) ஆகிய இடங்களில் நடைபெற்றுள்ளன.
பிரிவு:
தமிழ் கணினி
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக